Pages

Wednesday, January 25, 2012

தமிழ் நடிகர்களா இவர்கள் ....???? ( ஒரு சிலரை தவிர )



        தமிழ் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று தனது சொத்துகளை விற்றும் தனது மக்களை இழந்தும் முல்லை பெரியாறு அணையை கட்டி எழுப்பிய பென்னி குய்க் அவர்களை நினைவு கூறும் தை மாதத்தில் ஒரு சில நம்பிக்கை துரோகிகளையும் நாம் நினைவு படுத்த வேண்டியுள்ளது.



   தமிழ்,தமிழன் என்று தான் நடிக்கும் படத்தில் வசனம் பேசி கொண்டும் தமிழர்களுக்கு தான் தான் பாதுகாவலன் என்பது போல் நடந்துகொள்ளும் நடிகர்கள் , தமிழ் உணர்வை தூண்டிவிட்டு அதை படத்தில் வைத்து படத்தை ஓட்டும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இது போன்ற எத்தனையோ பேரை தமிழ் மக்களின் பணம் வாழ வைத்து கொண்டிருக்கிறது. .

       

     எத்தனையோ பிரச்சனைகளில் முதல் ஆட்களாக குரல் கொடுக்கும் இவர்கள் முல்லை பெரியார் அணை பிரச்சனையில் குரல் கொடுக்காததற்க்கு ஒரே ஒரு கரணம் மட்டுமே  அது பணம்.


        மலையாளிகள் நடத்தும் நகை கடைகளில் பிரான்ட் அம்பாசிடராக தன்னை காட்டிக்கொண்டு கொள்ளை காசு பார்க்கும் இவர்கள் எப்படி மலையாளிகளுக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் என்று நாம் நம்பமுடியும் கேரளாவில் தான் நடிக்கும் படம் ஓட வேண்டும் கர்நாடகாவில் ஓட வேண்டும் ,ஆந்திராவில் ஓட வேண்டும் பின் எப்படி நமக்காக குரல் கொடுப்பார்கள்.



    படத்தை ஒட்டவும் தன்னை பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளவும் தமிழ் மக்கள் வேண்டும் தனது வருமானம் குறைகிறது என்றால் மட்டும் தமிழக மக்களை கண்டுகொள்ளமாட்டார்கள் இவர்களுக்கு நம் மக்கள் ரசிகர் மன்றம் வைத்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகின்றனர் அவர்களும் திருந்த போவது இல்லை நாமும் திருத்திகொள்ளபோவதுமில்லை.

  இனியாவது இவர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பதும் பால் அபிஷேகம் பண்ணுவதையும் நிறுத்தி உணர்வுள்ள தமிழனாக வாழ பழகுவோமாக.

மானத்தை தொலைத்து
பாதுகாப்பாய் இருப்பதைவிட
மானத்தோடு செத்து
மறித்திருக்கலாமே ..!!! 




8 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ungal karuthuraiku nanri nanbare...!!!

    ReplyDelete
  3. Yr words all not correct .Public still drinking tea in malayali shop and buying gold in their shops.All are wrong peoples not only actors.Right peoples have to struggle against in front of this actors running film theaters only this way actors know they have some against with them other wise none of them not care except peoples like VAIKO,UDAYA KUMAR,NEDUMARAN ,SEEMAN ETC

    ReplyDelete
  4. soodu,soranai illadha thamizhargal irrukkum varai idhu thodarum nandri

    ReplyDelete
  5. ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடி! நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன் Anonymous அதே சமயம் நடிகர்கள் சமுதாயத்திற்கு முன் மாதிரி அல்லவா..

    ReplyDelete
  7. நன்றி தனபாலன் ....

    ReplyDelete
  8. நடிகர்கள் மட்டுமல்ல, நம் மக்களும் கூடத்தான் கேரளா டீக்கடைக்கு தான் ஓடுகிறோம் .முதலில் பொருள் வாங்க கூட தமிழனின் கடைக்கு முக்கியதுவம் கொடுப்போம் . அப்போதுதான் தமிழன் வளருவான் . அங்கே உள்ள நம்மக்களுக்கும் மலையாளிகளுக்கும் அமைதி திரும்பிருக்கையில் அமைதியாயிருப்போம் .

    ReplyDelete