Tuesday, September 6, 2011

படித்ததில் பிடித்தது - கீற்றுவில்



அம்மாயி பாலனோட style.

காந்திதேசத்தில்
கருணைக்கு கதவடைப்பா...?
சனநாயக வல்லரசில்
சத்தியத்திற்கு சவக்குழியா...?
மனிதநேயத்திற்கு
மரணஅறிவிப்பா...?

இருபதாண்டுகாலங்கள்
இருண்ட நாட்களாய் உருண்டோடியும்
எஞ்சியுள்ள உயிரும் வேண்டுமா...?

நீதிதேவனின் நிழலும்கூட
தமிழனுக்கு நெருப்பாய்... ஏன்?

எம் சகோதரா
உன்னை உள்வாங்கியுள்ள
சிறைகம்பிகளுக்கும் நாங்கள்
சிம்மசொப்பனமாவோம்...

எம்
கழுத்தறுபட்டாலும்
உன் கைவிலங்கறுக்காமல்
ஓயமாட்டோம்...

சாவைக்கண்டு அஞ்சும் கூட்டமல்ல நாம்
சத்தியத்தைக் காத்திடவே போராட்டம்...
சத்தியம் சத்தியமாக வெல்லும்
சத்தியம் சத்தியமாக வென்றே தீரும்...

அரசே
எங்கள் உணர்வுகளை உணர்ந்து
எம் உறவுகளுக்கு உயிர்கொடு...

உன்
கோரப்பசிக்கு மூவரின் உயிர்தான் வேண்டுமானால்...
தொங்கட்டும் உனது தூக்குக்கயிறு...
மூன்றாய் அல்ல
ஆறரைக்கோடியாய்...

- வேங்கை.சு.செ.இப்ராஹீம்


Monday, September 5, 2011

தலைவர்கள்


















இனத்திற்காக                                 பணத்திற்காக


மொழிக்காக                               கனி மொழிக்காக

கொள்கைக்காக                            கொள்ளைக்காக

இனத்திற்காக குடும்பத்தை                குடும்பத்திற்காக இனத்தை
இழந்தவர்                                 கொன்றவர்

அயராது சமர் செய்து                     நாத்திகம் பேசியே ஆத்திகத்தை
வெற்றி கொடி நாட்டியவர்               தொடர்பவர்

தோழர்களது உழைப்பில்                  தொண்டர்களது உழைப்பில்
இன விடுதலையை வளர்த்தவர்          குடும்பத்தை வளர்த்தவர்

இன விடுதலைக்காக தன்                பதவிக்காக எதுவும் செய்பவர்..??  
இன்னுயிரையும் கொடுப்பவர்            

தேசிய தலைவர் , தம்பி என                 தமிழின தலைவர் , கலைஞர் என
உலக தமிழர்களால் கொண்டாடபடுபவர்      தாமே பட்டம் சூட்டி கொண்டவர்


நீ இருந்தாலும்                        நீ இருந்தாலும் இல்லை என்றாலும்     
 இல்லைதான் என்றாலும்               நாட்டுக்கு ஆகபோவதில்லை
என்றும் எங்கள் நெஞ்சினில்            ஒன்றும்


                        
          

                

Friday, September 2, 2011

வீடு திரும்புதல்


வீடு திரும்புதலின் 
வழித் தடத்தில் 
கடன்காரர்களிடம் தப்பியவர்கள் 
குடிகாரர்களிடம் 
சிக்கிக் கொள்கிறார்கள்.

மனித புழங்கு வெளிகளின் 
மூலை முடுக்குகளில் நின்று
அரைக் கோப்பை மதுவுக்காக 
சிறுமையடையும் யானைகளோ 
ஒரு காலத்தில் 
பிரம்மாண்டமானவைகளாய்     
வாழ்ந்து கெட்டவை தாம்.

                        - அகரத்தான். 
Blogger Widgets