Saturday, October 8, 2011

மாடு ஏன் காலேஜ் போகல??




படிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..
அவனுக்கு ஆச்சரியமா இருக்கு..
பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…

படிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?

விவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,
படிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…! எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி..,  சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..
படிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு..,  தலைய மட்டும் ஆட்டினா..!  அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க..?

விவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..!
படிச்சவன்: ? ? ? ? ?
பெருசுக்கு  லொள்ளு கொஞ்சம் கூடத் தான்

Join Only-for-tamil

அகரத்தான் ஆதங்கங்கள்


 வினை விதைத்தவன் 
-------------------------------------------------------------

ஆம், அவன் உப்பை தின்றான்.
அவர்கள் தண்ணீர்
கொடுக்க வேண்டியதாயிற்று.
எல்லாம் அவன் செயல்.
---------------------------------------------------



மூடர் தேசம் 

------------------------------------

திருடு.
கொலை செய்.
கொள்ளையடி.
ஊழல் செய்.
நில அபகரிப்பு செய்.
கட்டப் பஞ்சாயத்து செய்.  
பன்னாட்டு முதலைகளுக்கு
நாட்டை விற்றுவிடு.
நியாயத்தின் வழி நின்ற
இனமழிக்க ஆயுதம் கொடு.
உனது குடிமகனை அண்டைதேசம்
கொலை செய்ய அனுமதி கொடு.
ஒருநாள் நீ தியாகியாவாய். 

நீ போகுமுன் மறக்காமல்
உன் குடும்பத்தாரிடம்
சொல்லிவிட்டு போ!

ஓட்டுப் பொறுக்க வருகையில்,
பணம் கொடுக்கச் சொல்.
பொருள் கொடுக்கச் சொல்.
இலவசம் அறிவிக்கச் சொல்.
காட்டிக் கொடுக்கச் சொல்.
கூட்டிக் கொடுக்கச் சொல்.
உறவாடிக் கெடுக்கச் சொல்.

எம் தலித்துகளின்
வீட்டில் தங்க சொல்.
அவர்களின் பழங்கஞ்சியை
தட்டி பறித்து குடிக்க சொல்.
அவர் தம் குழந்தைகளின்
மூக்கை சிந்திவிடச் சொல்.
சித்தாளின் சிமெந்துகலவையை
தட்டிப்பறித்து தவறாமல்
புகைப்படம் எடுத்து
பத்திரிக்கைகளில் உலாவரச் செய்.

இந்த மூடர் கூட்டம்
உன் குடும்பத்தை
ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து
அழகு பார்க்கும்.

இது நிதர்சனம்.
-----------------------------------------------------------

ஓர் அறிவிப்பு பலகை தன்னைப் பற்றி...



 
அவன் ஒரு தான்தோன்றி.
பெற்றோருக்காக பள்ளி சென்றதும்,
வாத்தியாருக்காக படித்ததும்,   
செய்யக் கூடாத தவறுகளை 
மிக சரியாகச் செய்ததும்,
செய்வதற்கு தவறுகள் எதுவும்
மிச்சம் இல்லாததாலேயே
மகான் வேடம் புனைந்ததும்,
புகையை புகையாலும்,
குடியை குடியாலும்,
கலவியை கலவியாலும்
தான் கற்றுத் தெளிந்த வாழ்வை,
சமூகத்தின் பொதுவெளிகளில்
புனைவுகளின் துணையோடு முன் வைத்து 
காற்றிலாடும் சருகாய் அலைந்து திரிபவன்.   
---------------------------------------------------------------------

                                        - அகரத்தான். 
Blogger Widgets