Saturday, October 22, 2011

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்...


இங்கு
சிறுநீர் கழிக்காதீர்
வாகனம் நிறுத்தாதீர்
எச்சில் துப்பாதீர்
குப்பை போடாதீர் என
எழுதிப் போட்டால் மட்டுமே
கேட்பேன் எனும் பிறவிகளுக்கு
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
--------------------------------------------------

கவனம் தமிழர்களே!
தமிழ்ச் சமூகத்திற்கு கேடு
இலக்கியம் படைக்கிறேன்
பேர்வழி என்று
கருணாநிதி வடிவிலும் வரலாம்.
அகரத்தான் வடிவிலும் வரலாம்.
----------------------------------------------------

பாலுக்குப் பூனையை
காவல் வைக்காதீர்!
தவறினால்
நீங்களுமாச்சு, 
பூனையுமாச்சு!
---------------------------------

குரங்கையும் அவனையும் 
தனித் தனியாக
பார்க்கத் தேவையில்லை.
அவ்வளவு அழகு.
------------------------------------------------------

                         - அகரத்தான்.     

Sunday, October 16, 2011

உங்களின் ஆயுளின் கடைசி நாளை அறிய வேண்டுமா



தனது ஆயுளின் கடைசி நாளை அறிய அனைவர்க்கும் ஆசை இருந்தாலும் அது பயம் கலந்ததாகவே இருக்கும் நமது ஆயுளின் கடைசி நாளை அறிந்து சொல்லும் ஒரு இணைய தளம் உள்ளது www.deathclock.com என்ற முகவரியில் உள்ள இணையத்திற்கு சென்று பிறந்த நாள், பிறந்த மாதம், ஆண்டு , ஆணா பெண்ணா போன்ற மேலும் சில விவரங்களை கொடுத்து பட்டனை அழுத்தினால் உங்கள் ஆயுளின் கடைசி நாள் காண்பிக்கப்படும் இதை நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்

ஆனால் ஒன்று
    சாகின்ற நாள் தெரிந்தால் வாழ்கின்ற நாள் நரகமாயிடும் 

Saturday, October 15, 2011

வெட்ட வெளிதனில்...

வீட்டுக்கு வந்ததும் கும்மாளமிடும் 
தீராத விளையாட்டுப் பிள்ளைகள்  
வகுப்பறையில் ஆசிரியரின் முகம் கண்டு  
களைத்து மயங்கிச் சரிகின்றன. 
---------------------------------------------------------------
எல்லோரையும் சிரிக்க வைக்கும் 
எங்களூர் குதிரைக்கார பூச்சியண்ணன்   
பூச்சி மருந்தை உட்கொண்டதில்,  
பெருக்கெடுத்த மல சலத்தில்  
வயிற்றிலிருந்த 
பூச்சிகளெல்லாம் செத்து மிதந்தன. 
------------------------------------------------------------------- 

ஊழல் வழக்கில் உள்ளேயிருக்கும் 
எதையும் தாங்கும் இதயங்கள்,  
கொசிக்கடி தாள இயலாமல் 
கதறுவதாக கொசுறுத் தகவல். 
------------------------------------------------------ 

தேர்தலுக்கு முன் 
கொள்ளைப் பணத்தில் 
கொஞ்சம் கிள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணத்தில் கொஞ்சம் கரைந்தது. 

தேர்தலுக்குப் பின் 
கருவூல வெள்ளைப்பணத்தில்  
அள்ளிக் கொடுத்தார்கள். 
கறுப்புப் பணம் மலைபோல உயர்ந்தது. 

முன்னது சட்டப்படிக் குற்றமாம்.  
பின்னது மக்கள் நலத் திட்டமாம். 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------

ஒரு துறையின் நிபுணத்துவம் பேண 
தகுதியும் தேர்வுமுறைகளும் தேவை 
மேலாண்மை செய்யவோ    
ஒரு மயிரும் தேவையில்லை. 
வாழ்க சனநாயகம்! 
---------------------------------------------------- 

தார்ச்சாலைக் கதகதப்பில்  
வாகனங்களுக்கு இரையாகும்  
அரவங்களும், 
நடமாடும் 
அரசுக் கருவூலங்களும். 
----------------------------------------------- 

எல்லோரும் கவிதை எழுதுவதால்  
வாக்கியங்களை மடக்கிப் போட்டு 
நானும் உரை எழுதி, 
கவிதை என்கிறேன். 
பழகிய பாவத்திற்காக பொறுத்தருள்வீர். 
--------------------------------------------------------------  

                                  - அகரத்தான்.  
Blogger Widgets