Friday, July 13, 2012

வினை

------------------------------  

சனங்களின் பிரச்சினைகளுக்காக 

சிறைக்குள் சென்றவர்கள் 
தத்தம் சொந்த பிரச்சினைகளில் 
மூழ்கிப் போயினர் . 

---------------------------------------------  

உன்னுடைய சொல்லை 
உண்மையென நம்பித்தான் 
உன்னை ஆதரித்தோம். 
உன் பின்னே அணிவகுத்தோம். 
உனக்கு வாக்களித்தோம். 

பிரதி பலனாக, 
என் மீது கிளர்ச்சியைத் திணித்தாய். 
ஏற்றுக் கொண்டு வினையாற்றியபோது, 
தற்காக்க நகங்களைக் கூர் தீட்டியபோது 
தீவிரவாதம் என்றாய். 
தீவிரவாதத்தை தூண்டிய நீயோ 
பாதுகாப்புடன் வலம் வருகிறாய். 

நீ முன்னமே தீர்மானித்திருந்த 
மோதல் சண்டையில் 
நான் உயிரிழந்தான பொய்யை  
கட்டவிழ்த்து விடுகிறாய். 

இறையாண்மைச் சாயம் 
பூசப் பட்டிருக்கும் பொய்யை 
என்னைப் போல் ஒருவன் 
பின்தொடருகிறான். 

உனது அடுத்த ஆட்டத்தை 
நீ துவங்கத் தொடங்குகிறாய். 
-----------------------------------------------------  















Thursday, July 12, 2012

தற்கொலை....
























குழந்தையுடன் தாய் 
தற்கொலை  செய்தியை 
கேள்வியுற்ற ஏனைய கணவன்மார்கள் 
தத்தம் மனைவிகளுடன் 
அலைபேசியில் 
அன்புமழை பொழிகிறார்கள். 
----------------------------------------------------------- 

கொஞ்சம் காகிதங்களையும் 
நிறைய எழுத்துக்களையும் 
அடுத்த தலைமுறைக்கு 
கையளிக்கவிருக்கும் 
என்னை என் பிள்ளை 
எப்படி எதிர்கொள்வானோ? 
-------------------------------------------- 

உயிரையும் (அ), 
மெய்யையும் (ம்) 
கொடுத்தவள் 
உயிர்மெய்யாகி (மா)  
நிற்கிறாள். 
-------------------------------- 

மக்களாட்சி ஈன்றெடுத்த மன்னர்களே! 
நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால் 
நாங்கள் பிழைத்து விடுவோம். 
நல்லது செய்கிறேன் பேர்வழியென 
நீங்கள் கிளம்புவது தான் 
வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 
------------------------------------------------------------ 

கழனிக்கு சென்றிருந்த 
அம்மாக்களின் வருகைக்காக 
காத்திருந்த பிள்ளைகள் 
எல்லாம் வளர்ந்து,  
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் 
பிள்ளைகளுக்காக காத்திருக்கிறார்கள். 
-----------------------------------------------------------













Sunday, July 8, 2012

நாளை தாக்குமா வைரஸ் ??? தப்பிக்க வழிகள்





       உலகெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களில் இணைய தளம் மூலம் , டி.என்.எஸ் ..,எனப்படும் புதிய வைரஸ் நாளை தாக்க போவதாக தகவல்கள் வெளியாகின்றன .புதிய வைரஸ் தாக்குதலில் இருந்து தப்ப , ஆன்- லைன் சோதனை வசதிகளும் அறிமுகமாகி உள்ளன

       டி .என் . எஸ் .,(டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது இணைய தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ .பி ., எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது தற்போது டி.என்.எஸ் , சேஞ்சர் (அலுரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டரை செயலிழக்க செய்யும் நாச வேலையில்  வெளிநாடுகளை சேர்ந்த 7 பேர் ஈடுபட்டுள்ளதாக கடந்தாண்டு தகவல் பரவியது .
   
        இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , பாதிப்புகளை தவிர்க்க அமெரிக்கா உளவு பிரிவான எப்.பி. ஐ.., மாற்று சர்வர் நிறுவியது இந்த சர்வர் நிறுத்தப்பட உள்ளதால் , வைரஸ் நாளை (9 ம் தேதி )மீண்டும் பரவ துவங்கிவிடும் என தற்போது தகவல்கள் வெளியாகின்றன
    
        திறன் வாய்ந்த ‘ ஆண்டி வைரஸ்’ சாப்ட்வேர் இல்லாதவர்கள் , ஆன் – லைன் மூலம் , டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கண்டறிய புதிய வசதி அறிமுகமாகி உள்ளது
      
         கம்ப்யூட்டர்களில் ‘வைரஸ்’ பாதிப்பு உள்ளதா என கண்டறிய www.dns-ok.us என்ற தளத்துக்கு செல்ல வேண்டும் . தளத்தில் நுழைந்த உடன் பச்சை நிறத்தில் ஐபி ஓகே  என தென்பட்டால் உங்கள் கம்ப்யூட்டரில் டி.என்.எஸ் வைரஸ் தாக்கவில்லை . வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தால் , சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை தகவல் காணப்படும்
வைரசை அழிக்க
     
        சோதனையில் உங்கள் கம்ப்யூட்டரில் ‘வைரஸ்’ பாதித்திருப்பது உறுதியானால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி  செய்யவும் உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து அந்த வைரசை நீக்குவது எப்படி என இங்கே விளக்கம் தரப்பட்டுள்ளது .
விண்டோஸ் XP, Vista,7 கணினிகளுக்கு
  
          டி.என்.எஸ் , சேஞ்சர் வைரசை கணினியில் இருந்து நீக்க பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான ‘அவிரா’ புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளது ‘Avira DNS Repair என்ற லிங்க் மூலம் , மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்
  
        கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருந்தால் இந்த மென்பொருள் இன்ஸ்டால் ஆகாது . ஒருவேளை பாதிகப்பட்டிருந்தால் வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்துவிடும் .
















Blogger Widgets