Monday, August 29, 2011

செங்கொடி


 தோழியே ..!            

மூவர் தூக்குக்கு எதிர்த்து
முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டாய் ,
முகமறியாத தோழி நீ  .! 
உன் இறப்புசாதரணமல்ல

தமிழ் உணர்வாளர்களை உலுக்குகின்ற  ஓர் இழப்பு..!
இனியும் தொடரவேண்டாம்  ..!   
உன்   போன்ற இழப்பு ..!     நீ இறந்துவிட்டதாய் 
எல்லா செய்தித்தாள்களும் தெரிவிக்கின்றன..! 

அது தவறு
உன்னைப்போன்றவர்கள் 
இறந்தாலும் இருந்தாலும் 

தமிழ் உணர்வாளர்கள் மனதில்
வாழ்ந்து கொண்டுதான்  
இருப்பாய் கடைசி தமிழன் உயிருடன் 
இருக்கும்வரை..!
உன்னைப்போலவே
நாங்களும் காத்திருக்கிறோம் இருக்கிறோம் ..!
நாளை நல்லதொரு
தீர்ப்பு வருமென ..!


                                                     - பாலமலை சித்தர் 

வீரவணக்கம்


Sunday, August 28, 2011

தீபிளம்பான செங்கொடி


அதிர்ச்சி செய்தி

தீபிளம்பான செங்கொடி


3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி,
பெண் தீக்குளிப்பு - காஞ்சிபுரத்தில் மக்கள் மன்றத்தை சேர்ந்த
 செங்கொடி என்ற பெண் தீக்குளித்து சாவு...
.3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தீக்குளிப்பு...
பேரறிவாளனுக்காக தீக்குளித்ததாக செங்கொடியின் சகோதரர் தகவல்
Blogger Widgets