சுயமரியாதைக்காரர்கள்
கௌரவப் பிச்சைக்கு
மக்களைக் கையேந்த வைத்து
சுயமரியாதையில்லாமல்
வாழப் பழக்குகிறார்கள்.
--------------------------------------------------------------
நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்
----------------------------------------------------------
கும்பலாகக் கூடையைப் போட்டு
குப்புறத் தூங்கும் திட்டத்தால்
ஏரிகளும் குளங்களும்
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி,
கோவனாண்டிகளின் குடிகள் மூழ்கின.
-----------------------------------------------------
இறையாண்மை
---------------------------------------------
கவனம் மக்களே!
இறையாண்மைக்குப் பிறந்த
அரசியல் வியாதிகள்
தேச பக்தியின் அகோரப் பசிக்கு
உங்களை இரையாக்கும்
வாய்ப்பிருக்கிறது.
-----------------------------------------------
- அகரத்தான்.

எல்லோருக்கும்
உலகத்திற்குள் வீடும்,
எனக்கு மட்டும்
வீட்டிற்குள் உலகமும்.
------------------------------------
சாப்பிட்டே சாகிறான்.
தூங்கியே சாகிறான்.
விழித்தே சாகிறான்.
குடித்தே சாகிறான்.
நான் இலக்கியம் படித்தே
சாகச் சொல்கிறேன்.
---------------------------------------
எப்போதும் செய்வதாக சொல்லியே
எதுவும் செய்யாமல் சாகடிப்பீர்.
இம்முறை செய்வதாகச் சொன்ன
இலவசத் திட்டங்களை
செய்ய வேண்டாம் என்கிறோம்.
நாங்கள் வாழ்ந்துவிட்டு போகிறோம்.
----------------------------------------------------------
நல்லக் காதலர்களை விடவும்
கள்ளக் காதலர்கள் தாம்
உலகைத் தூங்க வைத்து
முழு திருப்தியடைகிறார்கள்.
-------------------------------------------------
நாட்டுப் பற்று அதிகமிருப்போர்
சம்பளம் பெறாமல்
நாட்டுக்கு உழைக்கக் கடவீராக.
-------------------------------------------------
அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
---------------------------------------------------
மும்மாரியில் நனைந்து
கட்சி அலுவலகங்களில்
புரளும் மலைப் பாம்புகள்,
உணர்வதில்லை தாம்
குடிநோயாளியாகியிருப்பதை.
-------------------------------------------------
- அகரத்தான்.
தேர்தல் படுத்தும் பாடு
---------------------------------------------------------------
அப்பா இறந்தபோது
துட்டி கேட்க வராதவர்கள்
அம்மா மனச்சிதைவிலிருந்தபோது
ஆறுதல் சொல்லாதவர்கள்
விபத்தில் காயமுற்றபோது
நலம் விசாரிக்காதவர்கள்
நம் காலுக்கு செருப்பாய்
உழைக்க மன்றாடுவது
தேசபக்தியன்றி வேறில்லை.
------------------------------------------------------
சனநாயகப் படுகொலை
-------------------------------------------------------------------
எவ்வளவு காவல்கள்?
எவ்வளவு இராணுவப் படைகள்?
எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்?
எவ்வளவு கண்காணிப்புகள்?
அவ்வளவையும் மீறி
இவ்வளவு திருடர்கள்.
--------------------------------------------------------------
ஆறுதல் கடைகள்
---------------------------------------------------
கண்ணாடி சீசாக்களில்
அடைபட்டிருக்கும்
அலாவுதீனின் பூதங்கள்
வாடிக்கையாளர்களின்
மனச் சிக்கல்களை
ஆற்றுப் படுத்துகின்றன.
அரசு கடைகள் இப்போது
ஆறுதல் கடைகளாகி விட்டன.
-----------------------------------------------
நாடு நலம் பெற...
---------------------------------------------------
மக்கள் நலத் திட்டங்களுக்கு
அரசின் நிதியாதாரம் பெருக
மணல் விற்கலாம்.
மது விற்கலாம்.
கஞ்சா விற்கலாம்.
அபின் விற்கலாம்.
எராயின் விற்கலாம்.
பிரவுன் சுகர் விற்கலாம்.
------------------------------------------------
காசே தான் கடவுளடா...
--------------------------------------------------------------------
கடவுள் தரிசனமென்று
கல்லாக் கட்டுகிறார்கள்
கடவுளின் முகவர்கள்.
ஐநூறு ரூபா முன் வரிசையிலும்
இருபது ரூபா பின் வரிசையிலும்.
----------------------------------------------------------
ஓடு சுமக்கும் நத்தை
----------------------------------------------------------
வேலைக்கு மலைத்தவன்
வேலை செய்தான்.
வேளா வேளைக்கு
உணவுத் தேவை தீர்க்க
ஆண் மகவு பிறந்தது.
-------------------------------------------
கடவுளின் மொழி
-------------------------------------------------
மகிழ்ச்சிக்கும் துயருக்கும்
மொழி தேவையில்லை.
கடவுளிடம் முறையிட மட்டும்
சமசுகிருதம் இருந்தால் போதுமானது.
-----------------------------------------------------------
- அகரத்தான்.
Blogger Widgets