பஞ்சாங்கம், சோதிடம், வெற்றி பலன்கள் , மனையடிச் சாத்திரங்கள், கோலப் புத்தகங்கள் வாங்க முண்டியடிக்கும் கும்பலில் நெரிபடவே வாய்த்திருக்கிறதுஇலக்கிய ஆர்வலர்களுக்கு. ----------------------------------------------------வயிற்றுப் பசிக்கு திசைகளுமில்லை. எல்லைகளுமில்லை. ------------------------------- ஆண்டி ஹீரோக்கள் ஆயுள் முழுக்க காதலிக்கிறார்கள். --------------------------------------------------- பிப்ரவரி - 14 மட்டும் வாலன்டினுடைய நாள். பிற நாட்களெல்லாம் என்னுடைய நாள். ----------------------------------- சூதாடிகளுக்கும் குடிகேடர்களுக்கும் குடும்பம் இருப்பது போலவே தெரிகிறது. ------------------------------------------------------------- குடிகளின் வாழ்வுரிமைப் போராட்டங்களை அரசுகள் சட்டம்-ஒழுங்கு என்று அணுகுவதாலேயே பிரச்சினைகள் மைய நீரோட்டம் நோக்கி நகர்கின்றன.
எல்லோராலும் கைவிடப்பட்டதொரு தேசத்தில் வாழ்வோமென்ற நம்பிக்கையையும், வாழ்ந்தோம் என்ற நினைவுகளையும் கைவிடாமல் சிலுவை சுமக்கும் இயேசுவாய்சுமந்து அலைந்து திரிவதுஇறையாண்மை மீறலெனில், அதைத் தொடர்வது நமது சனநாயகக் கடமையாகிறது. -------------காதலர் தினத்தில் உன்னிடம் கையளிக்க என்னிடம் ஏதொன்றுமில்லை காதலைத் தவிர. -------------உள்ளே வெளியே ஆட்டத்திற்கு நான் தயார் இப்போது. அதிகாரம் வலியுறுத்தும் கொடும் சனநாயகச் சட்டங்களின் சட்டகங்களுக்குள் நின்று வசந்தத்தின் இடி முழக்கமென முழங்குவேன். அதிகாரத்தின் உறக்கம் கலைக்கும் கொடும் கனவென நானிருப்பேன். ---------------மனுசன் கும்புடறதுக்கும் சாப்புடறதுக்கும் ஆயிரம் கண்டு புடிச்சிருக்கான். வயித்துக்கு வழி செய்யுற விவசாயத்தைக் காக்குறதுக்கு தான் ஒரு மயிரையும் கண்டு புடிக்க மாட்டேங்கறான். ---------------நான் நல்லவனாகவோ, கெட்டவனாகவோ மாறுவது என் கையில் ஒன்றுமில்லை. எல்லாம் வல்ல மக்கள் நல அரசின் கையில் தானிருக்கிறது. -------------பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தப்பியதே மனுசனுக்கு. சிங்களப் பேரினவாதத்துக்கு தப்பியதே தமிழீழத்துக்கு. ------------தாஜ்மகால் ஒன்றும் உலக அதிசயமில்லை. தாஜ்மகாலை நான் காண நேர்ந்தது தான் உலக அதிசயம். -------------புகை வண்டியில் நடந்தே சாக முடிவெடுத்தவர்களைகாப்பாற்ற முடியாது போலிருக்கிறது. -------------புகைவண்டி நிலையத்தில் இருக்கைகள் அமர்ந்துகொண்டும்மனிதர்கள் நின்று கொண்டும் புகை வண்டிக்காகக் காத்திருக்கிறார்கள். -----------பழுதடைந்த தள்ளுவண்டியில் பழுதில்லாமல் ஓடுகிறது வாழ்க்கை. ----------கையில் காசில்லாமல் காய்ந்து நிற்கையில் தான் கோவில் திருவிழா களை கட்டும் போலிருக்கிறது. ----------நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், தங்கள் இன்னுயிரை கொடுப்பேன் என்று சூளுரைத்து அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தமிழக மீனவர் படுகொலை, தமிழீழப் படுகொலை, மூன்று தமிழருக்கு தூக்கு, முல்லை பெரியாறு, தண்டகாரன்யப் படுகொலை என்று எங்கள் உயிரை எடுக்கத் தானே திட்டமிடுகிறார்கள்?
--------------------------------------------------------------------------
இந்தியா ஒளிர்கிறதா?
இந்தியா ஒழிகிறதா?
நன்றாகக் கேட்டுச் சொல்லுங்கள்!
சரியாகக் கேட்கவுமில்லை.
சரியாகத் தோன்றவுமில்லை.
------------
அதிகாரத்திலிருப்போனை
கால் நக்கிப் பிழைப்பது
உங்களுக்குப் பிடித்திருக்கிறது!?
உங்களை விட தேசப் பற்றாளன்
புவிதனில் எவருமில்லை என்கிறான்
கார்பொரேட் காந்தி.
------------
புலம் பெயர் தமிழனே!
உங்களின் போர் முழக்கத்தில்
புலங்களின் மனசாட்சி
பெயர்ந்து போகட்டும்!
-------------
காந்திகள் மக்களுக்கு
குல்லா போடுகிறார்கள்.
-------------
பூ விற்பவனின் வாழ்க்கை
மணப்பதற்கு பதில்
நாறுவது எப்படி?
--------------
Blogger Widgets