Thursday, February 9, 2012

மனிதனுக்கு விதிக்கப்பட்ட கடமை......






    இறைவனை நம்பியவர்கள் கைவிடப்படுவதில்லை அனைத்தும் இறைவனுடைய செயல் என்பதே உண்மை . தெய்வபக்தி உடையவர் , பிறருக்கு உதவி செய்பவராக இருப்பர் .

      ஏழைகளுக்கு உதவி செய்வது மனிதனின் தலையாய கடமை .

   வேலை செய்யமால் அரைநொடி கூட இருக்காதீர்கள் , விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ,இறைவனால் தரப்பட்ட தொழிலை செய்வது தான் மனிதனுக்கு விதிக்கப்பட்ட கடமை .

    பகையை களைந்தால் வெளியுலுள்ள பகை தானாகவே நீங்கிவிடும் . உள்ளப்பகை நீங்க இறைவன் மீது பக்தி கொள்ள வேண்டும் . அதற்க்கு உள்ளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .

   உயிர்களிடம் அன்பு செலுத்துவதுடன் , இயற்க்கை விதியை அனுசரித்து வாழுங்கள்  அடக்கம் பொறுமை ஆகிய குணங்களை வளர்த்து கொண்டால் வாழும் வாழ்க்கை அர்த்தமனதாக இருக்கும் .

      நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பது போல அதர்மம் இருந்தால் தான் தர்மத்தை பிரித்து பார்க்க முடியும் . தர்மம் இருக்கும் வரை அதர்மமும் இருந்தே தீரும் .

                                         
                                              --   மகாகவி பாரதியார் 



















Blogger Widgets