Sunday, October 23, 2011

காமம் (kamam)

புரிந்து கொள்!
இல்லை,
புணர்ந்து கொல்.
--------------------------


பிறக்காத தலைமுறைக்கும்
சேர்த்தே
புதைகுழி வெட்டியவனை
கொண்டாடியது ஒரு தேசம்
முதல் குடிமகனாய்...
--------------------------------------------

பால் விலையை விட
தண்ணீர் விலை கூட,
ஆட்சிப் பீடத்தில்
பொருளாதாரப் புலி.
-------------------------------

மகனாய் மட்டுமே
வளர்க்கிறார்கள் குழந்தைகளை
எல்லா தகப்பன்களும்.
------------------------------------
                             


தேர்தலில்
வெற்றி பெற்றவனின்
கொண்டாட்டத்தை விடவும்,     
வெற்றுப் பயலின்
வரம்புமீறல் தான்
முகம் சுழிக்க வைக்கிறது. 
----------------------------------------------

நாலு ரவுண்டுக்கு
செலவழிக்க முடியாதெனில்,
அப்புறம் என்னடா
நல்ல தலைவன்?  
------------------------------------

நரிகளுக்குத் தேவை
கொஞ்சம் இரத்தமும்
சில எலும்புத் துண்டுகளும்.

வாக்காளனுக்கு
காந்தி நோட்டும்
கவர்ன்மென்ட் சரக்கும்
கோழிப் பிரியாணியும்.
-----------------------------------------

அரைச் சாண் வயிற்றுக்காக 
அந்தர் பல்டி அடிக்கும்
குரங்குகளின் நிலையை விடவும்,  
அரைப் புட்டி மதுவுக்காக
அலைந்து திரியும்
மனிதக் குரங்குகளின் நிலை
பேரவலம் தான்.
--------------------------------------

இவ்வளவு பெரிய மனுசனை
இத்தனூண்டு கிளி தான்
சம்பாதித்துக்
காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
-------------------------------------------------

அணு அணுவென
அலைந்தவன்
அணு அணுவாய்
அழிவான்.
-----------------------------
                  - அகரத்தான். 

4 comments:

Prem S said...

//புரிந்து கொள்!
இல்லை,
புணர்ந்து கொல்.//கலக்கிட்டிங்க போங்க

avan indri.... said...

super nanba....

avan indri.... said...

sssssssss.....

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

கவிதைகள் கலக்கல் தல

Blogger Widgets