
பிழைப்புக்காக
பட்டணம் போனவர்கள்
தங்கள் மண்ணையும்,
பழகிய மக்களையும்
பத்தமடைப் பாய்க்குள்
சுருட்டி கையோடு
எடுத்து செல்கிறார்கள்.
------------------------------
முதல் நாள் இரவில்
குடை சாய்ந்த வண்டிகள்
மறுநாள் காலை
பரப்புரை வாகனங்களாகி
விடுதல் இயல்பே.
------------------------------
குழந்தைகளே
ஏமாந்தது போதும்!
பெரிய வெடிகளை
வெடிக்கக் கூடாதென
நமக்குச் சொல்லிவிட்டு
இந்த அப்பாக்கள் மட்டும்
வெடித்து மகிழ்வது
எவ்வளவு பெரியத் துரோகம்.
------------------------------
- அகரத்தான்.
--------------------
2 comments:
//
பிழைப்புக்காக
பட்டணம் போனவர்கள்
தங்கள் மண்ணையும்,
பழகிய மக்களையும்
பத்தமடைப் பாய்க்குள்
சுருட்டி கையோடு
எடுத்து செல்கிறார்கள்
//
ரொம்ப சரியாய் சொன்னிங்க
நன்றி ராஜா
Post a Comment