Sunday, October 30, 2011

துளிகள்




பிழைப்புக்காக 
பட்டணம் போனவர்கள் 
தங்கள் மண்ணையும், 
பழகிய மக்களையும் 
பத்தமடைப் பாய்க்குள் 
சுருட்டி கையோடு  
எடுத்து செல்கிறார்கள். 
------------------------------------ 

முதல் நாள் இரவில் 
குடை சாய்ந்த வண்டிகள் 
மறுநாள் காலை 
பரப்புரை வாகனங்களாகி 
விடுதல் இயல்பே. 
---------------------------------------- 

குழந்தைகளே 
ஏமாந்தது போதும்! 
பெரிய வெடிகளை 
வெடிக்கக் கூடாதென 
நமக்குச் சொல்லிவிட்டு 
இந்த அப்பாக்கள் மட்டும் 
வெடித்து மகிழ்வது 
எவ்வளவு பெரியத் துரோகம். 
---------------------------------------------- 

                          - அகரத்தான். 
                           --------------------   

2 comments:

rajamelaiyur said...

//
பிழைப்புக்காக
பட்டணம் போனவர்கள்
தங்கள் மண்ணையும்,
பழகிய மக்களையும்
பத்தமடைப் பாய்க்குள்
சுருட்டி கையோடு
எடுத்து செல்கிறார்கள்
//
ரொம்ப சரியாய் சொன்னிங்க

Agarathan said...

நன்றி ராஜா

Blogger Widgets