Wednesday, October 12, 2011

அகரத்தான் உளறல்கள்

எல்லோருக்கும்
உலகத்திற்குள் வீடும்,
எனக்கு மட்டும்
வீட்டிற்குள் உலகமும்.
------------------------------------

சாப்பிட்டே சாகிறான்.
தூங்கியே சாகிறான்.
விழித்தே சாகிறான். 
குடித்தே சாகிறான்.
நான் இலக்கியம் படித்தே
சாகச் சொல்கிறேன்.
---------------------------------------

எப்போதும் செய்வதாக சொல்லியே
எதுவும் செய்யாமல் சாகடிப்பீர்.
இம்முறை செய்வதாகச் சொன்ன 
இலவசத் திட்டங்களை 
செய்ய வேண்டாம் என்கிறோம்.
நாங்கள் வாழ்ந்துவிட்டு போகிறோம்.
----------------------------------------------------------

நல்லக் காதலர்களை விடவும்  
கள்ளக் காதலர்கள் தாம்
உலகைத் தூங்க வைத்து
முழு திருப்தியடைகிறார்கள்.
-------------------------------------------------

நாட்டுப் பற்று அதிகமிருப்போர்
சம்பளம் பெறாமல்
நாட்டுக்கு உழைக்கக் கடவீராக.
-------------------------------------------------
அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
---------------------------------------------------

மும்மாரியில் நனைந்து 
கட்சி அலுவலகங்களில்
புரளும் மலைப் பாம்புகள்,
உணர்வதில்லை தாம்
குடிநோயாளியாகியிருப்பதை.
-------------------------------------------------     

                               - அகரத்தான்.

1 comment:

மதுரை சரவணன் said...

//அவசரப் பயணத்தின் போது தான்
பேருந்து ஓட்டுனர்கள்
நமக்கு நடை வண்டி நாட்களை
நினைவுக்கு படுத்துகிறார்கள்.
-----------------------------------------------//

unmai... vaalththukkal----

Blogger Widgets