Saturday, October 22, 2011

இதனால் தெரிவிப்பது என்னவென்றால்...


இங்கு
சிறுநீர் கழிக்காதீர்
வாகனம் நிறுத்தாதீர்
எச்சில் துப்பாதீர்
குப்பை போடாதீர் என
எழுதிப் போட்டால் மட்டுமே
கேட்பேன் எனும் பிறவிகளுக்கு
சொல்வதற்கு ஒன்றுமில்லை.
--------------------------------------------------

கவனம் தமிழர்களே!
தமிழ்ச் சமூகத்திற்கு கேடு
இலக்கியம் படைக்கிறேன்
பேர்வழி என்று
கருணாநிதி வடிவிலும் வரலாம்.
அகரத்தான் வடிவிலும் வரலாம்.
----------------------------------------------------

பாலுக்குப் பூனையை
காவல் வைக்காதீர்!
தவறினால்
நீங்களுமாச்சு, 
பூனையுமாச்சு!
---------------------------------

குரங்கையும் அவனையும் 
தனித் தனியாக
பார்க்கத் தேவையில்லை.
அவ்வளவு அழகு.
------------------------------------------------------

                         - அகரத்தான்.     

No comments:

Blogger Widgets