Friday, October 28, 2011

கவிதைக்காரன் நாட்குறிப்பிலிருந்து...

இரவல் புத்தகங்கள் 
-------------------------------------------------------

எச்சில் தொட்டு
பக்கங்களைப் புரட்டுவதும்,
படித்த பக்கத்தை
மடித்து வைப்பதும்,
தலைக்கு வைத்து படுப்பதும்,
பிஞ்சுக் கரங்களில் கொடுத்து
வேடிக்கைப் பார்ப்பதையும் காட்டிலும்,
புத்தகத்தை புத்தகமாகவே
வைத்திருப்போர் பரவாயில்லை தான்.
-------------------------------------------------------------

உயிர் எழுத்து 

--------------------------------------

காதலைப் பற்றி கோடி பேரும்,
வாழ்வைப் பற்றி சிலநூறு பேரும்
எழுதியும் தீரவில்லை.
காதல் வாழ்வின்
ஒரு அங்கமேயாதலால்,
சிறுபான்மைக்கு ஆதரவாக
வாழ்வை எழுத
களமிறங்க வேண்டியாயிற்று.
-----------------------------------------------

                              - அகரத்தான்
                             --------------------- 

No comments:

Blogger Widgets