Monday, October 3, 2011

காந்தி செயந்தி - சில குறிப்புகள்.


சில குறிப்பிட்ட தினங்களில் 
மது விலக்கம் செய்கிற அரசுக்கு 
இருக்கிறதோ இல்லையோ, 
வெட்கக் கேடாக இருக்கிறதெனக்கு. 
-------------------------------------------------------- 

தடை விதித்த தினத்தில்  
மட்டும் தான் 
மது விற்பனையும்  
மது குடிப்பதும்    
களை கட்டுகிறது. 
-------------------------------------- 

புத்தகத்தை 
புத்தகமாக 
வைத்திரு என்றார். 
புத்தகத்தை 
புத்தகமாகவே 
வைத்திருக்கிறேன். 
------------------------------ 

குடிநோயாளிகள் கவனத்திற்கு 
------------------------------------------------ 

காந்தி செயந்தியில் நரகத்திற்கும், 
பிற தினங்களில் சொர்க்கத்திற்கும்  
அரசு மரியாதையோடு 
அனுப்பி வைக்கப் படுவீர். 
------------------------------------------------- 

காந்தி செயந்தி 
----------------------- 

காந்தி குடிக்காதே என்றார்.      
ஆறு மணிக்கு மேல் குடி என்கிறது 
மனசும், அரசும்.   
-------------------------------------------------- 

குடிக்க பணம் தேவையில்லை அப்பு,  
எவனாச்சும் மாட்டுவான். 
பொறுமை தான் தேவை.  
---------------------------------------------------------- 
 
யாரெல்லாம் என் கட்சி?  
வா நண்பா, 
நாம குடிச்சிட்டு சாவோம்.    
அவங்க குடிக்காம சாகட்டும். 
--------------------------------------------- 
  
யாருயா இவங்கள பொறக்க சொன்னது, 
யாருயா இவங்கள சாவ சொன்னது?  
ஏன்யா நம்மள சாவடிக்கிறாங்க?       
நாட்டுல நடக்குற அக்குருமங்கள கண்டு 
அவரு உசுரோட இருந்திருந்தா கூட 
கடைய திறக்கத் தான்யா சொல்லுவாரு. 
---------------------------------------------------------------- 

                                   - அகரத்தான். 

No comments:

Blogger Widgets