Wednesday, October 26, 2011

யோசிச்சா செத்தா போயிடுவ?



மக்கள் மனதில்
தன் பெயரை எழுதாதவன் 
அடுத்தவன் சுவற்றில்
எழுதிப் பார்க்கிறான்.
----------------------------------------

குதிரை பேரம் முடித்து 
ஆட்சியில் அமர்ந்த கழுதைக்கு 
மனிதனைப் பற்றி
யோசிக்கக்கூட நேரமில்லை.
-----------------------------------------------
    
ஒவ்வொரு ஓட்டுக்கும்
உசுரு முக்கியம்.
அரசு சாராயக் கடையை
தேர்தல் முடியுமட்டுமாவது
மூடுனா தேவலை.
--------------------------------------------

திருடுவான்னு தெரிஞ்சும்
வீட்டு சாவியை திருடன்
கையிலக் கொடுப்பது தான் 
உலகப் பெரும் சனநாயகம்.
-------------------------------------------    

மட்டைப் பந்துப் வேடிக்கை பார்.  
கொடியேற்றி மிட்டாய்
கொடுத்தால் வாங்கிச் சாப்பிடு.
பாரத் மாதாகி ஜே ,
ஜெய் ஹிந்த் சொல்லு.
வாழ்வாங்கு வாழ்வாய்! 
------------------------------------------------

யாழ்ப்பாணத்தில் 
எண்ணெய் வளம் இல்லை.
அதனால் தான்
அவர்களுக்கு எதுவுமே இல்லை.
----------------------------------------------------

எண்ணெய் வளம்
இல்லாத தேசத்தில் 
உரிமைக்குரல் எழுப்ப
யார் அனுமதித்தது?
அடக்கு.
அழித்தொழி.
-----------------------------------     
                                           - அகரத்தான்.  




No comments:

Blogger Widgets