Saturday, October 1, 2011

குறும் பூக்கள்



காதல் பைத்தியங்களின் உளறல்களை
உடனிருந்து கேட்பதைக் காட்டிலும்
பெருந்துன்பம் உலகில்
வேறிருப்பதாய் தெரியவில்லை.
-------------------------------------------------------

நம் கைகளுக்கு மாறியவுடன்
வெடிக்கும் பலூன்களையும்,
உடையும் பொம்மைகளையும்
திருவிழாக் கடை வியாபாரிகள்
எங்கிருந்து தான் பெறுகிறார்கள்?
-------------------------------------------------------

நம் முதிராப் பருவத்தில்
முகிழ்த்த முதல் காதல்
மழைக் கால மேகமாய்
கலைந்ததால் தான்,

உனக்கு உன் கணவனும்,
எனக்கு என் மனைவியும்,  
நமக்கு நம் பிள்ளைகளும்,
இந்த துயரற்ற வாழ்வும்
வரமாய் வாய்த்திருக்கிறது.

காதல் கை கூடியிருந்தால்
நம் துயரம்
சொல்லில் அடங்காததாய்
இருந்திருக்கும்.
----------------------------------------------------------
                                  - அகரத்தான்.   

No comments:

Blogger Widgets