Thursday, October 27, 2011

தத்து பித்து

சுயம்பு
 -------------------

கடவுளைக் கண்டால் அழைத்து வா
பேசுவதற்கு ஏராளம் உள்ளன.

புராண, இதிகாசக் கற்பனைகளை
குப்பையில் தூக்கி எறி.  

இறையாண்மையின் அளவுகோல் 
மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுமா?

சுதந்திர தினம் முட்டாள்களின் தினம்.
அதைப் புறக்கணியுங்கள் என்றால்

நீங்கள் கேட்கவாப் போகிறீர்கள்?

தானாகத் தெளிவீர்கள்.
அதுவரைக் காத்திருக்கிறேன்.
-------------------------------------------------------------

அளவுகோல் 

 -----------------------------------

தாத்தா வெகுளி,
எறும்புக்கும் தீங்கிழைக்காதவர்.
அதிர்ந்தும் பேசாதவர்.

அப்பா குடிநோயாளி. 
சீட்டு, குடிக்கு அடிமையாகி,
நாற்பதுச் சொச்சத்தில்
ஆயுளை தொலைத்தவர்.

என்னை எடுத்துக்கொள்.  
அயோக்கியத் தனங்கள்
அத்தனையும் அத்துப்படி.
மகானாவதற்கான வாய்ப்பு
எனக்கு அதிகம்.

பரம்பரைப் பெருமை பேசி
உங்களை ஆளும் வாய்ப்புக்காக
வாசற்படி வந்து நிற்பவனை,   
எந்த அளவுகோலை வைத்து
அளவிடுவீர்கள் என் மக்களே!
----------------------------------------------------

                          - அகரத்தான். 

2 comments:

naadodi said...

அண்ணா தங்களின் கவிதைகள் அடுத்த கட்டத்தை நோக்கி மிக கம்பீரமாக பயணிக்கறது

Agarathan said...

நன்றி நாடோடி அவர்களே ......

Blogger Widgets