Saturday, October 8, 2011

ஓர் அறிவிப்பு பலகை தன்னைப் பற்றி...



 
அவன் ஒரு தான்தோன்றி.
பெற்றோருக்காக பள்ளி சென்றதும்,
வாத்தியாருக்காக படித்ததும்,   
செய்யக் கூடாத தவறுகளை 
மிக சரியாகச் செய்ததும்,
செய்வதற்கு தவறுகள் எதுவும்
மிச்சம் இல்லாததாலேயே
மகான் வேடம் புனைந்ததும்,
புகையை புகையாலும்,
குடியை குடியாலும்,
கலவியை கலவியாலும்
தான் கற்றுத் தெளிந்த வாழ்வை,
சமூகத்தின் பொதுவெளிகளில்
புனைவுகளின் துணையோடு முன் வைத்து 
காற்றிலாடும் சருகாய் அலைந்து திரிபவன்.   
---------------------------------------------------------------------

                                        - அகரத்தான். 

No comments:

Blogger Widgets