Thursday, July 12, 2012

தற்கொலை....
























குழந்தையுடன் தாய் 
தற்கொலை  செய்தியை 
கேள்வியுற்ற ஏனைய கணவன்மார்கள் 
தத்தம் மனைவிகளுடன் 
அலைபேசியில் 
அன்புமழை பொழிகிறார்கள். 
----------------------------------------------------------- 

கொஞ்சம் காகிதங்களையும் 
நிறைய எழுத்துக்களையும் 
அடுத்த தலைமுறைக்கு 
கையளிக்கவிருக்கும் 
என்னை என் பிள்ளை 
எப்படி எதிர்கொள்வானோ? 
-------------------------------------------- 

உயிரையும் (அ), 
மெய்யையும் (ம்) 
கொடுத்தவள் 
உயிர்மெய்யாகி (மா)  
நிற்கிறாள். 
-------------------------------- 

மக்களாட்சி ஈன்றெடுத்த மன்னர்களே! 
நீங்கள் ஒன்றும் செய்யாதிருந்தால் 
நாங்கள் பிழைத்து விடுவோம். 
நல்லது செய்கிறேன் பேர்வழியென 
நீங்கள் கிளம்புவது தான் 
வயிற்றில் புளியைக் கரைக்கிறது. 
------------------------------------------------------------ 

கழனிக்கு சென்றிருந்த 
அம்மாக்களின் வருகைக்காக 
காத்திருந்த பிள்ளைகள் 
எல்லாம் வளர்ந்து,  
பள்ளியிலிருந்து வீடு திரும்பும் 
பிள்ளைகளுக்காக காத்திருக்கிறார்கள். 
-----------------------------------------------------------













No comments:

Blogger Widgets