Wednesday, December 14, 2011

கிராமம் நோக்கி ( Village)



இயந்திர வாழ்க்கையில்
இடிந்த நம் வாழ்வை
காண்போமா !!

ஓய்வு கிடைத்தால்
ஒதுங்கி போவோம்
நகரம் விட்டு
நகர்ந்து போவோம்
கிராமம் நோக்கி !!

கொட்டும்  மழைநீர்
புகாத தார் சாலை –
நிலமேன்றால் காரை

மண் கூட பூந்தொட்டியாய்
மரமெல்லாம் நம்
சிந்தனை போல்
போன்சாய்

இந்நகர வாழ்வை விட்டு
எப்போதேனும்....

உச்சி உருகும்
வெயில் போதும்
குடில் நுழைந்தால்
உயிர் குளிரும்
தரை குளிரும்

தாய் மெழுகிய
சாணத் தரை
போவோமா ஏதேனும் ஒரு நாளில்

மழையின்றி தவிப்போமே !
ஓர் நாளில்
ஒதுங்கி போவோம் கிராமம் நோக்கி !!

கிராம இலக்கணம்
அறிவாய் நீயும் !
குடும்ப வாழ்கை
குழைந்து போகா அன்பு வாழ்க்கை
ஊரார் முகம் ஒருவனறிவான்

கிராமம் கிழிந்து போகா
பழைய துணி

இன்றோ நாளையோ
மாறிப்போகும்
கான்கிரிட் வாழ்வு
கலந்து போகும்

“ நகரம் வெறுத்த  ஒரு நாளில்
நெய்த வேதனை நெசவு இது “


          - அகரத்தான் 
Blogger Widgets