Friday, July 13, 2012

வினை

------------------------------  

சனங்களின் பிரச்சினைகளுக்காக 

சிறைக்குள் சென்றவர்கள் 
தத்தம் சொந்த பிரச்சினைகளில் 
மூழ்கிப் போயினர் . 

---------------------------------------------  

உன்னுடைய சொல்லை 
உண்மையென நம்பித்தான் 
உன்னை ஆதரித்தோம். 
உன் பின்னே அணிவகுத்தோம். 
உனக்கு வாக்களித்தோம். 

பிரதி பலனாக, 
என் மீது கிளர்ச்சியைத் திணித்தாய். 
ஏற்றுக் கொண்டு வினையாற்றியபோது, 
தற்காக்க நகங்களைக் கூர் தீட்டியபோது 
தீவிரவாதம் என்றாய். 
தீவிரவாதத்தை தூண்டிய நீயோ 
பாதுகாப்புடன் வலம் வருகிறாய். 

நீ முன்னமே தீர்மானித்திருந்த 
மோதல் சண்டையில் 
நான் உயிரிழந்தான பொய்யை  
கட்டவிழ்த்து விடுகிறாய். 

இறையாண்மைச் சாயம் 
பூசப் பட்டிருக்கும் பொய்யை 
என்னைப் போல் ஒருவன் 
பின்தொடருகிறான். 

உனது அடுத்த ஆட்டத்தை 
நீ துவங்கத் தொடங்குகிறாய். 
-----------------------------------------------------  















1 comment:

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உணர்வின் வெளிப்பாடு!

Blogger Widgets