Saturday, January 28, 2012

மோடியா ,அத்வானியா..????




ஈழதமிழர்கள் பிரச்சனையை தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியுடன் இருக்கிறது . சமீபத்தில் இலங்கை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா பல திட்டங்களை துவக்கி வைத்துள்ளார் .


       -    தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்

     
ஈழதமிழர் பிரச்சனையை தீர்ப்பதிலா  இல்லை ஈழதமிழர்களையே தீர்பப்திலா என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.

             ------------------------------------------------------------------------------




வருங்காலத்தில் பெரிய அளவில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும் பார்லிமென்ட் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் நாடு இப்போது சிக்கலான நிலையில் உள்ளது இந்த சிக்கலை தீர்க்கும் வல்லமை பா.ஜ., வுக்கு மட்டும் தான் உண்டு மத்தியில் மீண்டும் பா.ஜ., தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை

 -    தமிழக பா .ஜ ., தலைவர் பொன் . ராதாகிருஷ்ணன்

  முதலில் உங்கள் பிரதமர் வேட்பாளர் மோடியா ,அத்வானியா என்பதை தெளிவுபடுத்துங்கள் ...!!

         -------------------------------------------------------------------------------------






       ராமதாஸ் மீது பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை போலீஸ் ரத்து செய்ய வேண்டும் இந்த பொய்யான புகாரை அளித்தவர் மீதும் அவரை தூண்டிவிட்டவர்கள் மீதும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

              -    பா.ம.க.,தலைவர் ஜி.கே மணி

  ராமதாஸ் என்ன கடவுளின் அவதாரமா தப்பே செய்யமாட்டாரா ?? நீங்களே பொய்யான புகார் என்று முடிவு பண்ணிட்டா அப்ப காவல்துறை எதுக்கு நீதிமன்றம் எதுக்கு தலைவரே .???

                      ----------------------------------------------------------------







No comments:

Blogger Widgets