Thursday, June 28, 2012

அசுர பூதம் ...



நீ புழுதியில் புரண்டெழுந்த
உன் புண்ணிய பூமியின் வீதிகளில்
பாலாறும், தேனாறும்
உன் படுக்கையறையில் கலைப் பொருட்களும்
உன் படுக்கைவிரிப்பில் பூ வேலைப்பாடுகளும்
உன் அறையெங்கும் வியாபித்திருக்க
உயர்ரக வாசனைத் திரவியங்களும்
குளிர்பதனியில் பாதுகாக்கப்பட்ட
உயர்தர உணவுப்பொருட்களும்,
உயிர்காக்கும் மருந்துப் பொருட்களும்
உணவருந்த தங்க வட்டில்களும்
குடி நீரருந்த வெள்ளிக் குவளைகளும்
நித்தமும் சித்தம் மகிழ
சுவற்றை அலங்கரிக்கும் காணொலியும்
கூடவே
உன் அண்டை வீட்டானை அச்சுறுத்தவென
உன் தலையணைக்கடியில்
அவன் ஒழித் து வைத்திருக்கும் வெடிகுண்டுகளும்
வெடிக்கும் குணமுடைய குண்டுகள்
காந்தியம் பேசிக் கொண்டிராதென
உனதறையின் கதவு தட்டி
எச்சரிக்கிறான் உதயகுமாரன்.
கொடும் சட்டத்தின் வழி
அடக்குமுறை ஏவுகிறான் சதிகாரன்.
வளர்ச்சி எனும் அசுர பூதத்தின்
அகோர பசிக்கு இரையாகும்
எம் சனங்களின் எதிர்காலத்தை
கணக்கில் கொள்ளாது
அவன் அவிழ்த்து விட்ட
புளுகு மூட்டைகளை
உண்மையென நம்பி
கனவுகளுடன் கை கோர்த்து
கண்ணுறங்கும் நீ
நாளைய உலகம் உனதென்கிறாய்  .
காலன் தன்னுடைய தென்கிறான் .
விடிந்தால் தான் தெரியும் யாருடையதென்று.





- அகரத்தான் 



















No comments:

Blogger Widgets