------------------------------ --------------------------
நான்கு பக்கச் சுவர்கள்
ஒழுகும் மேற்கூரை
ஒரு சிதைந்த கரும்பலகைக்குள்
அழியாமல் பாதுகாக்கப்பட்ட
காலாதிகால நினைவுக்குறிப்புகளை
மனக்கோழிக் கிளறிக் கலைக்கிறது.
------------------------------ -----------------------
எல்லா ஊரிலும் கிடைக்குமெனினும்
தானே செய்த அரிசி முறுக்கை
அசலூரில் தங்கிப் படிக்கும்
தன் செல்லக்குட்டிக்கு
யார் தலையிலேனும்
சுமத்தியனுப்பும் அம்மாக்கள்
இன்னுமிருக்கவே செய்கிறார்கள்.
------------------------------ ------------------------------ ----
குடும்பம், சமூகம் புறமொதுக்கி
அறுபதும் முப்பதுமென
தொண்ணூறு தினங்களையும்
முயங்கி சுருண்ட நாய்க்காதல்கூட
கடவுளின் காதலளவு குமட்டவில்லை.
------------------------------ ------------------------------ --------
என்ன தகிடுதத்தம் செய்தேனும்
ஆட்சியதிகாரத்தை பிடிக்க தீர்மானித்தவன்
மிகவும் பின்தங்கிய தொகுதி எதுவென
பூதக்கண்ணாடி வழி தேடத் தொடங்குகிறான்.
------------------------------ ------------------------------ ------------------
தாழ் தளம், சொகுசு
விரைவு, மிதவை என்பதெல்லாம்
கட்டண உயர்வுக்காகத் தானன்றி
சனங்களின் பயன்பாட்டுக்கு அன்று.
------------------------------ ------------------------------ --
துரியோதனர்கள் துகிலுரித்ததால்
நதிப் பெண்
அழவும் கண்ணீரின்றி
அம்மணமானாள்.
------------------------------ --------------------------
யாரையும் கேட்காமல்
அமரும் இருக்கையினளவு குறைத்து
தன் வருவாயைப் பெருக்கிய
பேருந்தின் உரிமையாளன்,
எல்லோரும் கேட்டுக்கொண்டும்
பயணக் கட்டணத்தை
குறைக்க மறுக்கிறான்.
------------------------------ ------------------------------ -----
எல்லோருக்கும் இரங்கற் பா எழுதி
நீடூழி வாழ்பவனுக்கு
ஒரு இரங்கற் பா எழுதவிழைந்த
எனக்கும் ஒரு இரங்கற் பா
எழுதி வைத்திருக்கிறான்
தேதி மட்டும் குறிப்பிடாமல்.
------------------------------ ------------------------------ -
வறுமைக்கோட்டின் வரம்பை
முப்பத்தி இரண்டென வரையறுத்த
மா பாவிகளுக்கு
முப்பத்தி இரண்டு கொடுத்து
ஆசுவாசம் அடையலாம்.
------------------------------ ----------------------
சாமானியனுக்குண்டான
எல்லா பொறுப்புகளும் எனக்குமிருக்கிறது.
சாலையில் எதிர்வரும்
மாண்புமிகு. அரசு குடிமகன்
மனம் வைத்தால்
எச் சேதாரமும் இன்றி கூடடைவேன்.
எல்லாம் அவன் செயல்.
------------------------------ ------------------------------ ----
அதிகாரத்தின் மீதான
ஊழல் வழக்குக் கோப்புகளை தின்று
தன் கோரநாக்கை உள்ளிழுத்துக்கொண்ட
மராட்டிய மாநிலக் கொடுந்தீயின்
ஆதிமூலம் குறித்து ஆராய்வதை
சமூகம் நிறுத்திக் கொண்டால்,
அக் கோரத் தாண்டவம்
மாநிலம் முழுதும் பரவாமல்
தலைமை செயலகத்தோடு நின்று கொள்ளும்.
------------------------------ ------------------------------ -------------
வெட்டுப்பட்ட கைக்கு
சுண்ணாம்புக் கொடாத காவலதிகாரி
முடிக்கப்படாத வழக்குகளுக்கு
பழங்குற்றவாளிகளை
பொறுப்பாளியாக்கும் போதும்,
வன்தாக்குதலைக் கட்டவிழ்க்கும் போதும்
கர்ணப் பிரபுவை விஞ்சுகிறான்.
------------------------------ ------------------------------ ---------------------
ஒப்பீட்டளவில்
குறைந்தபட்ச அயோக்கியத்தனங்கள்
கடவுளுக்கு ஏற்புடையதல்ல.
------------------------------ -------------------------
வாய்ப்புக் கிடைக்காததால்
நல்லவனாக நீடிக்கிற அயோக்கியர்கள்
மாபெரும் தலைவர்களாக வீற்றிருப்பது
சனநாயகம்
தேசத்திற்கு வழங்கிய வெகுமதி.
------------------------------ ----------------------------
அடிதடி, கை கலப்பின் பொருட்டு
காவல் நிலையம் வந்த
வாதியும், பிரதிவாதியும்
ஒரு வழியாகச் சமாதானமடைந்தனர்.
பேரம் படியாததால்
காவலதிகாரி
சமாதானமடையவில்லை.
------------------------------ --------------------------
Tweet
ஒழுகும் மேற்கூரை
ஒரு சிதைந்த கரும்பலகைக்குள்
அழியாமல் பாதுகாக்கப்பட்ட
காலாதிகால நினைவுக்குறிப்புகளை
மனக்கோழிக் கிளறிக் கலைக்கிறது.
------------------------------
எல்லா ஊரிலும் கிடைக்குமெனினும்
தானே செய்த அரிசி முறுக்கை
அசலூரில் தங்கிப் படிக்கும்
தன் செல்லக்குட்டிக்கு
யார் தலையிலேனும்
சுமத்தியனுப்பும் அம்மாக்கள்
இன்னுமிருக்கவே செய்கிறார்கள்.
------------------------------
குடும்பம், சமூகம் புறமொதுக்கி
அறுபதும் முப்பதுமென
தொண்ணூறு தினங்களையும்
முயங்கி சுருண்ட நாய்க்காதல்கூட
கடவுளின் காதலளவு குமட்டவில்லை.
------------------------------
என்ன தகிடுதத்தம் செய்தேனும்
ஆட்சியதிகாரத்தை பிடிக்க தீர்மானித்தவன்
மிகவும் பின்தங்கிய தொகுதி எதுவென
பூதக்கண்ணாடி வழி தேடத் தொடங்குகிறான்.
------------------------------
தாழ் தளம், சொகுசு
விரைவு, மிதவை என்பதெல்லாம்
கட்டண உயர்வுக்காகத் தானன்றி
சனங்களின் பயன்பாட்டுக்கு அன்று.
------------------------------
துரியோதனர்கள் துகிலுரித்ததால்
நதிப் பெண்
அழவும் கண்ணீரின்றி
அம்மணமானாள்.
------------------------------
யாரையும் கேட்காமல்
அமரும் இருக்கையினளவு குறைத்து
தன் வருவாயைப் பெருக்கிய
பேருந்தின் உரிமையாளன்,
எல்லோரும் கேட்டுக்கொண்டும்
பயணக் கட்டணத்தை
குறைக்க மறுக்கிறான்.
------------------------------
எல்லோருக்கும் இரங்கற் பா எழுதி
நீடூழி வாழ்பவனுக்கு
ஒரு இரங்கற் பா எழுதவிழைந்த
எனக்கும் ஒரு இரங்கற் பா
எழுதி வைத்திருக்கிறான்
தேதி மட்டும் குறிப்பிடாமல்.
------------------------------
வறுமைக்கோட்டின் வரம்பை
முப்பத்தி இரண்டென வரையறுத்த
மா பாவிகளுக்கு
முப்பத்தி இரண்டு கொடுத்து
ஆசுவாசம் அடையலாம்.
------------------------------
சாமானியனுக்குண்டான
எல்லா பொறுப்புகளும் எனக்குமிருக்கிறது.
சாலையில் எதிர்வரும்
மாண்புமிகு. அரசு குடிமகன்
மனம் வைத்தால்
எச் சேதாரமும் இன்றி கூடடைவேன்.
எல்லாம் அவன் செயல்.
------------------------------
அதிகாரத்தின் மீதான
ஊழல் வழக்குக் கோப்புகளை தின்று
தன் கோரநாக்கை உள்ளிழுத்துக்கொண்ட
மராட்டிய மாநிலக் கொடுந்தீயின்
ஆதிமூலம் குறித்து ஆராய்வதை
சமூகம் நிறுத்திக் கொண்டால்,
அக் கோரத் தாண்டவம்
மாநிலம் முழுதும் பரவாமல்
தலைமை செயலகத்தோடு நின்று கொள்ளும்.
------------------------------
வெட்டுப்பட்ட கைக்கு
சுண்ணாம்புக் கொடாத காவலதிகாரி
முடிக்கப்படாத வழக்குகளுக்கு
பழங்குற்றவாளிகளை
பொறுப்பாளியாக்கும் போதும்,
வன்தாக்குதலைக் கட்டவிழ்க்கும் போதும்
கர்ணப் பிரபுவை விஞ்சுகிறான்.
------------------------------
ஒப்பீட்டளவில்
குறைந்தபட்ச அயோக்கியத்தனங்கள்
கடவுளுக்கு ஏற்புடையதல்ல.
------------------------------
வாய்ப்புக் கிடைக்காததால்
நல்லவனாக நீடிக்கிற அயோக்கியர்கள்
மாபெரும் தலைவர்களாக வீற்றிருப்பது
சனநாயகம்
தேசத்திற்கு வழங்கிய வெகுமதி.
------------------------------
அடிதடி, கை கலப்பின் பொருட்டு
காவல் நிலையம் வந்த
வாதியும், பிரதிவாதியும்
ஒரு வழியாகச் சமாதானமடைந்தனர்.
பேரம் படியாததால்
காவலதிகாரி
சமாதானமடையவில்லை.
------------------------------
2 comments:
மிக அருமையான கவிதைகள்! வாழ்த்துக்கள்!
நன்றி சுரேஷ் .....
Post a Comment