------------------------------

கூடங்குளம்
மின்வெட்டு
சங்கரன்கோவில்
முல்லை பெரியாறு
தமிழக மீனவன்
ஈழத் தமிழன்
ஐ .நா தீர்மானம்
பெங்களூரு நீதி மன்றம்
கண்ணுக்குத் தெரியாத கண்ணி ஒன்று
அறிவுக்கு மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
------------------------------
ஒருவன் மட்டும்
உன்னைக் குற்றம் சாட்டினால்
அவன் அயோக்கியனாக இருக்கக்கூடும்.
ஒவ்வொருவனும்
உன்னைக் குற்றம் சாட்டினால்
நிச்சயம் நீ தான்
அயோக்கியனாக இருக்கக் கூடும்.
------------------------------
சாலையில் எதிர்ப்படும் பெண்டிரிடம்
அழகை எதிர்நோக்கும் சைத்தான்
ஒருமுறையேனும் தன் முகத்தை
கண்ணாடியில் பார்த்திருப்பதில்லை.
------------------------------
அறுப்பவனை நம்பிய
அறுபட்ட ஆடுகளுக்காக
அனுதாபப் படாதவன்
கசாப்புக்காரனுக்காக கரிசனம்
காட்டுவது தான்
ஏனெனப் புரிந்தால் சொல்லுங்கள்!
------------------------------
மனசாட்சியின் ஆட்சி எனில்
நடவடிக்கை எடுக்கலாம்.
சட்டத்தின் ஆட்சி என்பதால் தான்
பிராது வரும்வரை
காத்திருக்க வேண்டியிருக்கிறது.
------------------------------
No comments:
Post a Comment