Tuesday, March 20, 2012

என்னமோ நடக்குது!


------------------------------------------------- 





கூடங்குளம் 
மின்வெட்டு 
சங்கரன்கோவில் 
முல்லை பெரியாறு 
தமிழக மீனவன்
ஈழத் தமிழன் 
ஐ .நா தீர்மானம் 
பெங்களூரு நீதி மன்றம் 

கண்ணுக்குத் தெரியாத கண்ணி ஒன்று 
அறிவுக்கு மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 
--------------------------------------------------------------------------

ஒருவன் மட்டும் 
உன்னைக் குற்றம் சாட்டினால் 
அவன் அயோக்கியனாக இருக்கக்கூடும். 

ஒவ்வொருவனும் 
உன்னைக் குற்றம் சாட்டினால் 
நிச்சயம் நீ தான் 
அயோக்கியனாக இருக்கக் கூடும்.  
------------------------------------------------------------------------

சாலையில் எதிர்ப்படும் பெண்டிரிடம் 
அழகை எதிர்நோக்கும் சைத்தான் 
ஒருமுறையேனும் தன் முகத்தை 
கண்ணாடியில் பார்த்திருப்பதில்லை. 
------------------------------------------------------------------- 

அறுப்பவனை நம்பிய 
அறுபட்ட ஆடுகளுக்காக 
அனுதாபப் படாதவன் 
கசாப்புக்காரனுக்காக கரிசனம் 
காட்டுவது தான் 
ஏனெனப் புரிந்தால் சொல்லுங்கள்!  
-------------------------------------------------------- 

மனசாட்சியின் ஆட்சி எனில் 
நடவடிக்கை எடுக்கலாம். 
சட்டத்தின் ஆட்சி என்பதால் தான் 
பிராது வரும்வரை 
காத்திருக்க வேண்டியிருக்கிறது. 
---------------------------------------------------------- 







No comments:

Blogger Widgets