Wednesday, March 21, 2012

இது மட்டும் போதுமா?

 



-----------------------------------------------------  

பாலையின் முக்கியத் தொழில் களவு. 
ஆம், தேசம் பாலையாகிவிட்டது. 
குடிகள் களவுக்குத் தான் 
தயாராக வேண்டும் போலிருக்கிறது. 

-------------------------------------------------- 

மரணம் அழையா விருந்தாளியாக 
வந்து தான் நம்மை அழைத்துச் செல்கிறது. 
-------------------------------------------------------------- 

கொத்து குண்டுகளையும்
நச்சு வாயுக்களையும் 
தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் 
தாங்கி உயிர்த்திருக்கும் எங்களுக்கு 
உன்னுடைய உண்ணாவிரத நாடகத்தைத் 
தாங்கும் சக்தி மட்டும் இல்லவே இல்லை. 
-------------------------------------------------------------- 

ஒரு மணித்துளி இருளை திணித்தவனை 
ஆட்சி மாற்றம் செய்து பழி தீர்க்கிறீர்கள். 
தலைமுறைக்கும் இருளையும், 
கொடும் துயரையும் 
எம் மீது திணித்தவர்களை 
என்ன செய்ய போகிறீர்கள்? 
--------------------------------------------------------------- 

வறண்ட பூமியில் 
வற்றாமல் ஓடுகிறது வாழ்க்கை.
------------------------------------------------- 

கூடங்குளத்தில் 
காந்தியின் ஊன்றுகோல் 
குண்டாந்தடியானது கண்டு 
மிதவாதிகள் 
மிரண்டு போய்க் கிடக்கிறார்கள். 





No comments:

Blogger Widgets