
------------------------------
பாலையின் முக்கியத் தொழில் களவு.
ஆம், தேசம் பாலையாகிவிட்டது.
குடிகள் களவுக்குத் தான்
தயாராக வேண்டும் போலிருக்கிறது.
------------------------------
மரணம் அழையா விருந்தாளியாக
வந்து தான் நம்மை அழைத்துச் செல்கிறது.
------------------------------
கொத்து குண்டுகளையும்
நச்சு வாயுக்களையும்
தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும்
தாங்கி உயிர்த்திருக்கும் எங்களுக்கு
உன்னுடைய உண்ணாவிரத நாடகத்தைத்
தாங்கும் சக்தி மட்டும் இல்லவே இல்லை.
------------------------------
ஒரு மணித்துளி இருளை திணித்தவனை
ஆட்சி மாற்றம் செய்து பழி தீர்க்கிறீர்கள்.
தலைமுறைக்கும் இருளையும்,
கொடும் துயரையும்
எம் மீது திணித்தவர்களை
என்ன செய்ய போகிறீர்கள்?
------------------------------
வறண்ட பூமியில்
வற்றாமல் ஓடுகிறது வாழ்க்கை.
------------------------------
கூடங்குளத்தில்
காந்தியின் ஊன்றுகோல்
குண்டாந்தடியானது கண்டு
மிதவாதிகள்
மிரண்டு போய்க் கிடக்கிறார்கள்.
No comments:
Post a Comment