Sunday, May 13, 2012

சும்மா .... !!!!








சீனப் பெருஞ்சுவரை விடவும்
நீண்ட சாதனைப் பட்டியலுக்கு சொந்தக்காரனை
தலைமேல் வைத்து கூத்தாடக் காத்திருக்கும்
மக்கள் மந்தைகளை எதிர்கொள்கையில் 
மகேசர்கள் பாதுகாப்பை
பன்மடங்கு பலப்படுத்துகிறார்கள். 

--------------------------------------------------------------------------- 

மக்களின் தலைமுறைக் கோபத்திலிருந்து 
சிறு சேதமின்றி மீண்டு வந்ததை வைத்தே 
அந்த மாநில மாநாடு வெற்றி என்கிறான். 
------------------------------------------------------------------------ 

அரசு மருத்துவமனைகள் 
பிறப்பையும், இறப்பையும் 
உறுதி செய்கின்றன. 
-----------------------------------------------  

ஒருமுறை கடந்து செல்ல 
வேகத்தடை உடைத்து 
அவனுக்கு வழி செய்பவன் 
அன்றைய பொழுதேனும் 
விபத்து நடக்காதென 
உத்திரவாதம் அளித்தால் 
ஆசுவாசம் கொள்ளலாம். 
---------------------------------------------------- 

ஐந்து கோடி கொடுத்தால் 
நீயும் ஆதினம் ஆகலாம். 
முடியும் வச்சுக்கலாம். 
முடியரசியையும் வச்சுக்கலாம். 
------------------------------------------------------ 

சோற்றுப் பொட்டலத்திற்காக சிலநூறு பேரும், 
புட்டிகளிலிருந்து கண் சிமிட்டும் 
அரசு மதுவை அருந்த சிலநூறு பெரும், 
கையூட்டு பணத்தை கைக்கொள்ள சிலநூறு பேரும், 
கழுதை மூக்கின் நிறம் காண சில நூறு பெரும் 
என கூடியதில் மண்டல மாநாடு களை கட்டியது. 
--------------------------------------------------------------------------------------- 

கடவுள் இல்லை. 
அவ்வளவு தான். 
வேறொன்றுமில்லை. 
------------------------------------ 

ஒரு நாள் விடுமுறைக்குக் கூட உதவாத 
கடவுளைக் கட்டிக் கொண்டு நீயே அழு. 
எனக்கொன்றும் அவசியமில்லை. 
--------------------------------------------------------------------- 

ஒரு இலட்சம் கையூட்டு பெற்று 
ஊழலை சிறுமைப் படுத்தியவனுக்கு 
நான்கு ஆண்டுகள் கடுங்காவல். 
எண்ணவியலா கோடிகளை கையூட்டு பெற்று 
ஊழலைப் பெருமைப் படுத்தியவனுக்கு 
ஆட்சி அதிகாரத்தில் பங்கு. 
வாழ்க சனநாயகம்! 
------------------------------------------------------------------------------ 

எல்லா நதிகளையும் 
வனங்களையும் 
விலை நிலங்களையும் 
தின்று செரித்தவன் 
இனி, 
கல்லைத் தான் 
மண்ணைத் தான் 
தின்னத்தான் வேண்டும். 
------------------------------------------  

சனநாயக நாட்டில் கொலை 
செய்வது கூடவா குற்றம்? 
நீங்களே சொல்லுங்கள். 
------------------------------------------------- 

வாழ்தலுக்கான 
கணங்களையும் 
மனங்களையும் 
சேமித்து வைக்காதவன் 
பணங்களை மட்டும் 
சேமித்து வைத்திருக்கும் 
அபத்தத்தை என்னென்று சொல்ல?  
----------------------------------------------------------- 

கள்ள சாராயத்தை ஒழித்த நல்லவர்கள் 
நல்ல சாராயத்தை காய்ச்சி விற்கிறார்கள். 
வாங்கி ஊற்றிக் கொள்ளுங்கள். 
---------------------------------------------------------------------- 

பயணச் சீட்டெடுக்க தயங்கி 
குழந்தைகளின் வயதை 
குறைத்துச் சொன்ன தாய்மார்களை 
தங்களின் உண்மை வயதை உரக்கச் சொல்லி 
திக்கு முக்காட வைக்கின்றன குழந்தைகள். 
-----------------------------------------------------------------------------













No comments:

Blogger Widgets