Monday, November 21, 2011

இனிமேலேனும் தமிழனாய் ........



 


சாதியை விட்டு
சற்றேனும் விலகி வா !

கடவுள் மதம் விட்டு
கணமேனும் கடந்து வா !

மூடத்தை முற்றாய் விட்டு
முழுதாய் சிந்திக்க வா !

முனகலை விட்டு உன்
மூலத்தை தேடி வா !

பொன்னியின் மைந்தனாய்
பொங்கி வா தமிழா !!

புதைந்த நம் புறநானுற்றை
புவியோர்க்கு புலர்த்த வா !

காமத்தின் காதலை விட்டு
குறுந்தொகையில் குளித்து வா !

பழமையை பலிகொடுத்து
புதிதாய் பிறந்து வா ....!!





No comments:

Blogger Widgets