Wednesday, November 30, 2011

தேசப்பற்று







கல்வி 
வேலைவாய்ப்பு 
வாழும் உரிமை 
கருத்து சுதந்திரம் 
உறவுகள் அழிப்பு 
உடைமைகள்  அழிப்பு 
இனமழிப்பு 
மொழியழிப்பு 
அந்நிய ஆக்கிரமிப்பு 
பண்பாட்டு அடையாளமழிப்பு 
இறையாண்மைக்குட்பட்ட குடிமகனை 
நேசநாடு கொன்று வீசுதல் 
கார்பரேட்டுகள் கொள்ளை இலாபத்திற்கு  
பூர்வகுடிகளை பசுமை வேட்டையாடுதல் 
சில்லறை வணிகமழிக்க 
பன்னாட்டு பகாசுரர்கள் படையெடுப்பு 
அணு ஆயுதம் தயாரிக்க 
வலிமையற்றோன் வாழுமிடம் 
சிறப்பு பொருளாதார மண்டலம் 
என்று ஏது நிகழ்ந்தாலும் 
கண்டு கொள்ளாதே! 
கவலை கொள்ளாதே! 

கொடிநாளின் இனிப்பு சுவைத்து 
தேசப் பற்றாளனாய் வாழ்ந்து மடி! 

அணிலின் முதுகில் 
இராமர் மூன்று கோடு போடும்போது,  
தேசம் உனக்கு சிலை வைக்கும்! 
-------------------------------------------------------------------  

முழுப் பைத்தியங்களை சமாளிக்கலாம். 
அரைப் பைத்தியங்களை 
ஒன்றும் செய்ய இயலாது! 
ஆமோதிக்கிறாள் இல்லத்தரசி! 
---------------------------------------------------------------- 

வழித் தடத்தில் 
சுடி, சேலை கடக்கையில் 
முகம் பார்த்து புளகாங்கிக்கும் 
சில்லரைப் புத்தி 
கட்டை காடு சேரும்வரை 
நிழலாய் கூடவே வருமோ? 
------------------------------------------------ 

எல்லா உடலும் 
எக்கு உடல் தான் 
நோய்மை வந்து 
வருத்தாத வரை. 
------------------------------ 

எதற்கெல்லாமோ 
யாரையெல்லாமோ 
ஏமாற்றிக் களிக்கிற சைத்தானுக்கு 
நோய்மையிடம் 
ஏமாந்து போகிற சூட்சுமம் மட்டும் 
புரிபடவே இல்லை. 
----------------------------------------------------- 

No comments:

Blogger Widgets