Saturday, November 26, 2011

ஓ... மாவீரர்களே!





ஓ... மாவீரர்களே! 
-------------------------------------------------- 

முகமறியா தலைமுறை வாழ 
தன் முகம், முகவரி அழித்தவர்களே! 
மக்களை நேசித்ததின் பொருட்டு 
மண்ணுக்கு உரமானவர்களே! 
இனவாத வல்லூறுகளிடமிருந்து 
எம்மினத்தை அடைகாக்க 
கேடயமாய் நின்றவர்களே! 
அரச பயங்கரத்திற்கு எதிராய் சமராடி 
ஒரு தசாப்தத்திற்கு மேலாய் 
எம்மினம் சுவாசிக்க 
தம் சுவாசம் கொடுத்தவர்களே! 
விடுதலைக் கனவு சுமந்து 
சமரசமற்று சமர்க் களங்களில் 
சதுராடிய புறநானூற்றுப் புலிகளே! 
நீங்கள் பாடிய பரணியில் 
வங்கக் கடல் 
செங் கடலாயிற்று. 
தாயகக் கனவுக்கு 
தன்னையே அர்ப்பணித்தவர்களே! 
உம் ஈகத்திற்கு ஈடில்லை அவனியிலே! 
உம் ஈகம் வீணாக விடோம்! 
வெல்வோம் தமிழீழம்! - அதையே 
உரக்கச் சொல்வோம் நாளும்! 
புலிகளின் தாகம் 
தமிழீழத் தாயகம்! 
               -------------- 

                             - அகரத்தான். 









No comments:

Blogger Widgets