Monday, March 12, 2012

நான் எதுவும் சொல்லப் போவதில்லை!....


 -------------------------------------------------------------------------- 






இந்தியா ஒளிர்கிறதா? 
இந்தியா ஒழிகிறதா? 
நன்றாகக் கேட்டுச் சொல்லுங்கள்! 
சரியாகக் கேட்கவுமில்லை.
சரியாகத் தோன்றவுமில்லை. 
                  ------------
அதிகாரத்திலிருப்போனை
கால் நக்கிப் பிழைப்பது 
உங்களுக்குப் பிடித்திருக்கிறது!? 
உங்களை விட தேசப் பற்றாளன் 
புவிதனில் எவருமில்லை என்கிறான் 
கார்பொரேட் காந்தி.
                 ------------ 
புலம் பெயர் தமிழனே! 
உங்களின் போர் முழக்கத்தில் 
புலங்களின் மனசாட்சி 
பெயர்ந்து போகட்டும்! 
                -------------
காந்திகள் மக்களுக்கு 
குல்லா போடுகிறார்கள். 
                -------------
பூ விற்பவனின் வாழ்க்கை
மணப்பதற்கு பதில் 
நாறுவது எப்படி? 
                --------------

1 comment:

கீதமஞ்சரி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html

Blogger Widgets