இந்தியா ஒளிர்கிறதா?
இந்தியா ஒழிகிறதா?
நன்றாகக் கேட்டுச் சொல்லுங்கள்!
சரியாகக் கேட்கவுமில்லை.
சரியாகத் தோன்றவுமில்லை.
------------
அதிகாரத்திலிருப்போனை
கால் நக்கிப் பிழைப்பது
உங்களுக்குப் பிடித்திருக்கிறது!?
உங்களை விட தேசப் பற்றாளன்
புவிதனில் எவருமில்லை என்கிறான்
கார்பொரேட் காந்தி.
------------
புலம் பெயர் தமிழனே!
உங்களின் போர் முழக்கத்தில்
புலங்களின் மனசாட்சி
பெயர்ந்து போகட்டும்!
-------------
காந்திகள் மக்களுக்கு
குல்லா போடுகிறார்கள்.
-------------
பூ விற்பவனின் வாழ்க்கை
மணப்பதற்கு பதில்
நாறுவது எப்படி?
--------------
1 comment:
தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_14.html
Post a Comment