கொழும்பு: இலங்கை வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானப்படை விமானங்களால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் அத்துமீறி இலங்கை வான்பரப்பில் பறந்தன. இது இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள ரேடாரில் பதிவானது. இதையடுத்து உஷாரான இலங்கை அதிகாரிகள், தங்களது வான்பரப்பில் இருந்து விலகிச்செல்லுமாறு உத்தரவிட்டும், அதையும் மீறி அந்த விமானங்கள் இலங்கையினுள் புகுந்து சென்றன. இதனால் இலங்கை பெரும் கவலையடைந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க அரசாங்கத்திடம் தனது ஆட்சேபத்தை இலங்கை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tweet
No comments:
Post a Comment