Wednesday, August 10, 2011

குறுங் கவிதைகள்.



ஒரு வாய் சுடுதண்ணிக்கு
ஆசைப்பட்டு
அதிகாலை உறக்கத்தை
பறிகொடுக்கிற அபத்தமே
சம்சாரிக்கு
வரமாய் வாய்த்திருக்கிறது.
                -------

கொடுப்பதற்கும்
பெறுவதற்கும்
அன்பு மட்டுமே இருக்கிறது
வண்டி வண்டியாய்.
               -------

ஓடுகால் திருமணமோ
நிச்சயிக்கப்பட்ட திருமணமோ
முதல் தினமே
வருகை புரிந்தாலும்
தாலிக்கட்டு பார்க்க மட்டும்
கொடுப்பினையில்லை.
கவிழ்த்துவிட்டு
வேடிக்கைப் பார்ப்பதே
வாடிக்கையாயிருக்கிறது
நெப்போலியனுக்கு.    .     
             -------

சுழித்து ஓடும்
நதியின் பாதையில்
இழந்தது குறித்த
ஏக்கங்களும்
நிராசைகளும்
கூழான்களாகவும்,
அடைந்தது குறித்த
பெருமிதங்களும்
உன்னதங்களும்  
கிளிஞ்சல்களாகவும்
விரவிக் கிடக்கின்றன.

            -------                        
       
                         --அகரத்தான். 

No comments:

Blogger Widgets