Wednesday, August 10, 2011

குறுங் கவிதைகள்.
 --------------------------------------------

தாய் பட்டினி.
குழந்தை குடிக்கிறது
மனப் பால்.
        -----

கருப்பண்ணசாமி
கடுங்காவல்.
காலியானது
உண்டியல்.
       ------

நேர்த்திக் கடன்.
வெட்டப்பட்ட ஆடு
உலையில் கொதிக்கிறது.
       ------

காங்கிரசு உட்கட்சி கூட்டம்.
வேட்டிகள் கிழிந்தன.
மண்டைகள் உடைந்தன.
சனநாயகம் செயித்தது.
       -------

கந்துவட்டி சட்டம்
கழுத்தை நெருக்கியதால்
கல்வி தந்தையானார்
நவீன காமராசர்.
        -------

காமராசர் ஆட்சியமைக்க
காமராசரை வீழ்த்தியவர்கள்
கம்பி எண்ணுகிறார்கள்.
கம்பிக்குள் வெளிச்சங்கள்
?
         -------
                                --அகரத்தான். 

No comments:

Blogger Widgets