Wednesday, August 24, 2011

சாதியச் சமூகம்.


பாரதியை அய்யராகவும்
தந்தை பெரியாரை நாய்க்கராகவும்
அம்பேத்கரை தலித்தாகவும்
காமராசரை நாடாராகவும்
வ.உ.சிதம்பரத்தை,
பிரபாகரனை பிள்ளையாகவும்
சாதியக் கட்சிகளின்
விளம்பரத் தட்டிகளில் நிறுத்தி
வாக்கு கொள்ளையடிக்கிறார்கள்
உள்ளூர் திருடர்கள். 
சாதி, மத விடுதலைக்குப் பிறகே
இன விடுதலை எனில்
அது இன்று
அத்தைக்கு மீசை
முளைத்த கதையோ?    
               
                            - அகரத்தான்

No comments:

Blogger Widgets