எரியும் வீட்டில்...
------------------------------ ------------------
கொலை நிகழ்ந்த வீட்டில்
தடயம் தேடுகிறான் காவலன்.
புகைப்படம் எடுக்கிறான் பத்திரிக்கையாளன்.
ஓட்டு பொறுக்குகிறான் அரசியல்வியாதி.
கண்ணீர் விடுகிறான் கடன்காரன்.
சரக்கு கேட்கிறான் குடிகாரன்.
கவிதை தேடும் சைத்தானை
கட்டிவைத்து உதைக்கிறேன் நான்.
------------------------------ ------------------------------ ----------
குழந்தைகளிடம்
புத்திசாலித்தனம் சுடர்விடுகையில்
அவளைப் போலிருப்பதாகவும்,
அசட்டுத்தனம் வெளிப்படுகையில்
என்னைப் போலிருப்பதாகவும்
எப்போதும் சொல்லித் திரிவாள்
என் வீட்டுப் பத்தினி.
------------------------------ --------------------------
இன்றோ நாளையோ
திருந்தக்கூடும் என்ற நம்பிக்கை
முழுமையாக பொய்த்தபின்
தண்ணீர் தெளித்தாயிற்று.
மனசை
வேறென்ன தான் செய்ய?
வேறெதைக் கொண்டு தான் அடிக்க?
------------------------------ ------------------------------ --
எல்லோரும் வேண்டுமெனக்கு.
பகிர்ந்து கொள்ளும் பக்குவம்
யாருக்குமில்லை.
இருக்கும் ஒரு வாக்கை
யாருக்கென தருவேன்?
யாரையென பகைப்பேன்?
------------------------------ -------------------
மனித உடலுக்கு
மிருக முகம் பொருத்தி
கடவுள் என்கிறாய்.
கடவுளைப்போல்
குழந்தை பிறந்தால்
ஏன் அலறிப் புடைக்கிறாய்?
------------------------------ -------------
தற்கொலைக்கு முயற்சித்தவனை
செருப்பாலடிக்கச் சென்றவன்
சபை நாகரிகம் கருதி
வார்த்தையாலடித்து வந்தேன்.
பேசாமல் செருப்பாலடித்திருக்கலாம்.
மனசுக்காவது ஆறுதலா இருந்திருக்கும்.
------------------------------ ------------------------------ ----
குடிக்கு நான் அடிமையில்லை.
எப்போதென்றாலும் நிறுத்த இயலும்.
ஆனால் எப்போதென்பதை
மாதக் கடைசியில் தான்
முடிவு செய்வேன்.
அதை நிறுத்த இயலாது என்னால்.
------------------------------ ------------------------
- அகரத்தான்.
Tweet
------------------------------
கொலை நிகழ்ந்த வீட்டில்
தடயம் தேடுகிறான் காவலன்.
புகைப்படம் எடுக்கிறான் பத்திரிக்கையாளன்.
ஓட்டு பொறுக்குகிறான் அரசியல்வியாதி.
கண்ணீர் விடுகிறான் கடன்காரன்.
சரக்கு கேட்கிறான் குடிகாரன்.
கவிதை தேடும் சைத்தானை
கட்டிவைத்து உதைக்கிறேன் நான்.
------------------------------
குழந்தைகளிடம்
புத்திசாலித்தனம் சுடர்விடுகையில்
அவளைப் போலிருப்பதாகவும்,
அசட்டுத்தனம் வெளிப்படுகையில்
என்னைப் போலிருப்பதாகவும்
எப்போதும் சொல்லித் திரிவாள்
என் வீட்டுப் பத்தினி.
------------------------------
இன்றோ நாளையோ
திருந்தக்கூடும் என்ற நம்பிக்கை
முழுமையாக பொய்த்தபின்
தண்ணீர் தெளித்தாயிற்று.
மனசை
வேறென்ன தான் செய்ய?
வேறெதைக் கொண்டு தான் அடிக்க?
------------------------------
எல்லோரும் வேண்டுமெனக்கு.
பகிர்ந்து கொள்ளும் பக்குவம்
யாருக்குமில்லை.
இருக்கும் ஒரு வாக்கை
யாருக்கென தருவேன்?
யாரையென பகைப்பேன்?
------------------------------
மனித உடலுக்கு
மிருக முகம் பொருத்தி
கடவுள் என்கிறாய்.
கடவுளைப்போல்
குழந்தை பிறந்தால்
ஏன் அலறிப் புடைக்கிறாய்?
------------------------------
தற்கொலைக்கு முயற்சித்தவனை
செருப்பாலடிக்கச் சென்றவன்
சபை நாகரிகம் கருதி
வார்த்தையாலடித்து வந்தேன்.
பேசாமல் செருப்பாலடித்திருக்கலாம்.
மனசுக்காவது ஆறுதலா இருந்திருக்கும்.
------------------------------
குடிக்கு நான் அடிமையில்லை.
எப்போதென்றாலும் நிறுத்த இயலும்.
ஆனால் எப்போதென்பதை
மாதக் கடைசியில் தான்
முடிவு செய்வேன்.
அதை நிறுத்த இயலாது என்னால்.
------------------------------
- அகரத்தான்.
2 comments:
தங்கள் கவிதையும் இதைவிட தங்கள் தளமும் மிக அழகாக இருக்கிறது...
எரியும் வீட்டில் கவிதை அருமை .தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துக்கள்
Post a Comment