Friday, September 2, 2011

வீடு திரும்புதல்


வீடு திரும்புதலின் 
வழித் தடத்தில் 
கடன்காரர்களிடம் தப்பியவர்கள் 
குடிகாரர்களிடம் 
சிக்கிக் கொள்கிறார்கள்.

மனித புழங்கு வெளிகளின் 
மூலை முடுக்குகளில் நின்று
அரைக் கோப்பை மதுவுக்காக 
சிறுமையடையும் யானைகளோ 
ஒரு காலத்தில் 
பிரம்மாண்டமானவைகளாய்     
வாழ்ந்து கெட்டவை தாம்.

                        - அகரத்தான். 

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

வீடு திரும்பல் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அருமை.

Agarathan said...

நன்றி முனைவர்.இரா.குணசீலன் சார் அவர்களே

Blogger Widgets