வீடு திரும்புதலின்
வழித் தடத்தில்
கடன்காரர்களிடம் தப்பியவர்கள்
குடிகாரர்களிடம்
சிக்கிக் கொள்கிறார்கள்.
மனித புழங்கு வெளிகளின்
மூலை முடுக்குகளில் நின்று
அரைக் கோப்பை மதுவுக்காக
சிறுமையடையும் யானைகளோ
ஒரு காலத்தில்
பிரம்மாண்டமானவைகளாய்
வாழ்ந்து கெட்டவை தாம்.
- அகரத்தான்.
2 comments:
வீடு திரும்பல் இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அருமை.
நன்றி முனைவர்.இரா.குணசீலன் சார் அவர்களே
Post a Comment