மாலை வணக்கம். சாதியையும், மதத்தையும் வைத்து யார் கடை பரப்பினாலும் அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளாதிருக்க முடியாது. முதலில் இந்த மாதிரி பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதென்பது கூடாது. அது சனநாயக மறுப்பு என சொன்னாலும் அந்த மறுப்பை வரவேற்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மனிதத்தின் அடிப்படையில் அணி திரண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயங்களை, போர்குரலை பதிவு செய்ய வேண்டுமே அன்றி சாதியத்தின், மதத்தின் பின் நின்று கொண்டு அறைகூவலிடக் கூடாது. அப்புறம், ஆதிக்க சாதி பேரணி, ஒடுக்கப்பட்ட சாதி பேரணி என்று எதையுமே இனம் பிரித்து பார்க்க தேவை இல்லை என்பதே என் கருத்து. சாதியால், மதத்தால் நாம் பிரிந்து கிடைப்பதாலேயே நம் இன விடுதலை இன்னுமொரு நூற்றாண்டுக்கு பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசாங்கம் என்ற பெயரில் செய்வதை நாம் வரவேற்க முடியாது. கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலை செய்யும் அரச பயங்கரவாதத்தை வேரறுக்க கிளம்பும் எதிர்வினையை நாம் நியாயப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.
Sunday, September 25, 2011
பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றிய என் கருத்து
மாலை வணக்கம். சாதியையும், மதத்தையும் வைத்து யார் கடை பரப்பினாலும் அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளாதிருக்க முடியாது. முதலில் இந்த மாதிரி பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதென்பது கூடாது. அது சனநாயக மறுப்பு என சொன்னாலும் அந்த மறுப்பை வரவேற்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மனிதத்தின் அடிப்படையில் அணி திரண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயங்களை, போர்குரலை பதிவு செய்ய வேண்டுமே அன்றி சாதியத்தின், மதத்தின் பின் நின்று கொண்டு அறைகூவலிடக் கூடாது. அப்புறம், ஆதிக்க சாதி பேரணி, ஒடுக்கப்பட்ட சாதி பேரணி என்று எதையுமே இனம் பிரித்து பார்க்க தேவை இல்லை என்பதே என் கருத்து. சாதியால், மதத்தால் நாம் பிரிந்து கிடைப்பதாலேயே நம் இன விடுதலை இன்னுமொரு நூற்றாண்டுக்கு பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசாங்கம் என்ற பெயரில் செய்வதை நாம் வரவேற்க முடியாது. கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலை செய்யும் அரச பயங்கரவாதத்தை வேரறுக்க கிளம்பும் எதிர்வினையை நாம் நியாயப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
நல்ல பதிவு,ஊதுற சங்கை ஊதுவோம்.கேட்டுத்தெளிய 50வருடமேனும் நாம் காத்திருக்க வேண்டும்.சாதியும் மதமும் இருக்கும் வரை சாதனைகள் இருக்காது.
Post a Comment