Sunday, September 25, 2011

பரமக்குடி துப்பாக்கி சூடு பற்றிய என் கருத்து


                                       மாலை வணக்கம். சாதியையும், மதத்தையும் வைத்து யார் கடை பரப்பினாலும் அதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டு வாளாதிருக்க முடியாது. முதலில் இந்த மாதிரி பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதென்பது கூடாது. அது சனநாயக மறுப்பு என சொன்னாலும் அந்த மறுப்பை வரவேற்க வேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம். மனிதத்தின் அடிப்படையில் அணி திரண்டு ஒடுக்கப்பட்ட இனத்தின் நியாயங்களை, போர்குரலை பதிவு செய்ய வேண்டுமே அன்றி சாதியத்தின், மதத்தின் பின் நின்று கொண்டு அறைகூவலிடக் கூடாது. அப்புறம், ஆதிக்க சாதி பேரணி, ஒடுக்கப்பட்ட சாதி பேரணி என்று எதையுமே இனம் பிரித்து பார்க்க தேவை இல்லை என்பதே என் கருத்து. சாதியால், மதத்தால் நாம் பிரிந்து கிடைப்பதாலேயே நம் இன விடுதலை இன்னுமொரு நூற்றாண்டுக்கு பின்னுக்குத் தள்ளப் பட்டிருக்கிறது.                                                                           ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசாங்கம் என்ற பெயரில் செய்வதை நாம் வரவேற்க முடியாது. கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலை செய்யும் அரச பயங்கரவாதத்தை வேரறுக்க கிளம்பும் எதிர்வினையை நாம் நியாயப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகிவிடும்.                                                     சாதியை வைத்து வயிறு பிழைக்க யார் கிளம்பினாலும், அவன் பின்னால் அணி திரளும் யாரும் உயிரோடு வீடு திரும்ப முடியாது என்ற நிலையை உருவாக்குவதன் மூலம் மட்டுமே இந்த குடிகேடர்களை திருத்த முடியும். அப்பொழுது தான் தான் உண்டு, தன் வேலை உண்டு  என்று குடும்பத்தை கவனிப்பான். இல்லையெனில் தினம் ஒரு மாநாட்டுக்கு சென்று வருவதையே பிழைப்பாக வைத்துக் கொள்வான். மதுப் புட்டியும், கோழி பிரியாணியும், காந்தி படம் பொறித்த காகிதமுமே  ஒரு இனத்தின் தேசிய அடையாளமாவதை சகித்துக் கொள்ளமுடியாது.  உறுதியான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை மேற்கொள்ள முடியும். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன மன நிலையில் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தினார்களோ தெரியவில்லை. ஆனால், எனது மனநிலை இது தான். 

1 comment:

Anonymous said...

நல்ல பதிவு,ஊதுற சங்கை ஊதுவோம்.கேட்டுத்தெளிய 50வருடமேனும் நாம் காத்திருக்க வேண்டும்.சாதியும் மதமும் இருக்கும் வரை சாதனைகள் இருக்காது.

Blogger Widgets