Wednesday, October 12, 2011

சுயமரியாதை


சுயமரியாதைக்காரர்கள்   
கௌரவப் பிச்சைக்கு 
மக்களைக் கையேந்த வைத்து  
சுயமரியாதையில்லாமல் 
வாழப் பழக்குகிறார்கள்.  
-------------------------------------------------------------- 

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

 ----------------------------------------------------------

கும்பலாகக் கூடையைப் போட்டு 
குப்புறத் தூங்கும் திட்டத்தால் 
ஏரிகளும் குளங்களும் 
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி, 
கோவனாண்டிகளின் குடிகள் மூழ்கின.   
----------------------------------------------------- 

இறையாண்மை

 --------------------------------------------- 

கவனம் மக்களே! 
இறையாண்மைக்குப் பிறந்த 
அரசியல் வியாதிகள் 
தேச பக்தியின் அகோரப் பசிக்கு 
உங்களை இரையாக்கும் 
வாய்ப்பிருக்கிறது.  
-----------------------------------------------    
  
                               - அகரத்தான். 
Blogger Widgets