சுயமரியாதைக்காரர்கள்
கௌரவப் பிச்சைக்கு
மக்களைக் கையேந்த வைத்து
சுயமரியாதையில்லாமல்
வாழப் பழக்குகிறார்கள்.
------------------------------
நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டம்
------------------------------
கும்பலாகக் கூடையைப் போட்டு
குப்புறத் தூங்கும் திட்டத்தால்
ஏரிகளும் குளங்களும்
மக்கள் வெள்ளத்தில் நிரம்பி,
கோவனாண்டிகளின் குடிகள் மூழ்கின.
------------------------------
இறையாண்மை
------------------------------
கவனம் மக்களே!
இறையாண்மைக்குப் பிறந்த
அரசியல் வியாதிகள்
தேச பக்தியின் அகோரப் பசிக்கு
உங்களை இரையாக்கும்
வாய்ப்பிருக்கிறது.
------------------------------
- அகரத்தான்.
1 comment:
arumai...vaalththukkal
Post a Comment