Tuesday, October 11, 2011

அகரத்தானின் அகம்


தேர்தல் படுத்தும் பாடு

 --------------------------------------------------------------- 

அப்பா இறந்தபோது 
துட்டி கேட்க வராதவர்கள் 

அம்மா மனச்சிதைவிலிருந்தபோது   
ஆறுதல் சொல்லாதவர்கள்

விபத்தில் காயமுற்றபோது 
நலம் விசாரிக்காதவர்கள் 

நம் காலுக்கு செருப்பாய் 
உழைக்க மன்றாடுவது 
      
தேசபக்தியன்றி வேறில்லை.            
------------------------------------------------------ 





சனநாயகப் படுகொலை

 ------------------------------------------------------------------- 

எவ்வளவு காவல்கள்? 
எவ்வளவு இராணுவப் படைகள்? 
எவ்வளவு விழிப்புணர்வு பிரச்சாரங்கள்? 
எவ்வளவு கண்காணிப்புகள்? 

அவ்வளவையும் மீறி  
இவ்வளவு திருடர்கள். 
-------------------------------------------------------------- 




    

ஆறுதல் கடைகள் 

--------------------------------------------------- 

கண்ணாடி சீசாக்களில் 
அடைபட்டிருக்கும் 
அலாவுதீனின் பூதங்கள் 
வாடிக்கையாளர்களின் 
மனச் சிக்கல்களை    
ஆற்றுப் படுத்துகின்றன. 
அரசு கடைகள் இப்போது 
ஆறுதல் கடைகளாகி விட்டன.
----------------------------------------------- 






     

நாடு நலம் பெற...

 --------------------------------------------------- 

மக்கள் நலத் திட்டங்களுக்கு 
அரசின் நிதியாதாரம் பெருக 
மணல் விற்கலாம். 
மது விற்கலாம். 
கஞ்சா விற்கலாம். 
அபின் விற்கலாம். 
எராயின் விற்கலாம். 
பிரவுன் சுகர்  விற்கலாம்.   
------------------------------------------------ 

காசே தான் கடவுளடா...

 -------------------------------------------------------------------- 

கடவுள் தரிசனமென்று   
கல்லாக் கட்டுகிறார்கள் 
கடவுளின் முகவர்கள். 
ஐநூறு ரூபா முன் வரிசையிலும்     
இருபது ரூபா பின் வரிசையிலும். 
---------------------------------------------------------- 




ஓடு சுமக்கும் நத்தை 
---------------------------------------------------------- 

வேலைக்கு மலைத்தவன் 
வேலை செய்தான்.    
வேளா வேளைக்கு 
உணவுத் தேவை தீர்க்க 
ஆண் மகவு பிறந்தது.    
------------------------------------------- 






கடவுளின் மொழி 
------------------------------------------------- 

மகிழ்ச்சிக்கும் துயருக்கும் 
மொழி தேவையில்லை.  
கடவுளிடம் முறையிட மட்டும் 
சமசுகிருதம் இருந்தால் போதுமானது.  
-----------------------------------------------------------  

                         - அகரத்தான்.       

3 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நறுக் நறுக் நறுக் என ஒவ்வொன்றும் ஆழமான சிந்தனைகள்..

”தளிர் சுரேஷ்” said...

நச் கவிதைகள்! அருமை!

Agarathan said...

நன்றி தளிர் & குணசேகரன் அவர்களே

Blogger Widgets